![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmmZ2OFz0I3qOz8d8KbbdjqbVNkcJdqD2F3EtSNC-3zDy4D0OwRIGhDsQqsU9tV1J-ezZQkxkhFErj2-JYrt-53D3Jrt2bU_hHFK3nyBq-D1MAGkmKa_G7Yt9IDHmDD4_SLl2xMeqlJfhD/s320/1301144634images.jpeg)
அண்மையில் வலி.வடக்குப் பகுதிக்குச் சென்ற உலக வங்கிக்குழு அங்கு மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து ஆராய்ந்தது. இதன்போது யாழ்.அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், வலி.வடக்குப் பிரதேச செயலாளர் எஸ்.முரளிதரன் ஆகியோரும் அங்கு பிரசன்னமாயிருந்தனர்.
அப்போது வலி.வடக்கு வீதிகளின் மோசமான நிலையை அரச அதிபர் உலக வங்கிக் குழுவிடம் தெளிவாக விளக்கினார். வலி.வடக்கில் 130 கிலோ மீற்றர் நீளமான வீதிகள் புனரமைக்கப்பட வேண்டும். பிரதான வீதிகள், உள்ளக வீதிகள் என அனைத்துமே முழுமையாகச் சேதமடைந்துள்ளன.
இவற்றைப் புனரமைக்கப் பல மில்லியன் ரூபா நிதி தேவைப்படுகின்றது. இதற்கு உலகவங்கி நிதியுதவிகளை வழங்கவேண்டும் என்று அரச அதிபர் உலக வங்கிக் குழுவிடம் கேட்டுக்கொண்டார். வீதிகளின் அபிவிருத்தி தொடர்பான திட்ட மதிப்பீடு அடங்கிய விவரங்களையும் அரச அதிபர் உலக வங்கிக் குழுவிடம் கையளித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக