முன்னாள் போராளிகளுக்கு தொழிற் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக போராட்டத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறுவர்கள் மீளவும் பரீட்சைக்கு தோற்றுவதற்கு வழிவகை செய்துள்ளதுடன், அவர்களுக்கு தனியார் பிரத்தியேக வகுப்புக்களையும் அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
யுத்தத்தின் போது சரணடைந்த 11696 விடுதலைப் புலி உறுப்பினர்களில் காயமடைந்த சகலருக்கும் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சரணடைந்த பெரும்பான்மையான பெண் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இலங்கை அரசாங்கத்தின் மனிதாபிமான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் கூர்ந்து கவனிக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆயிரம் விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக