திங்கள், 5 ஜூலை, 2010

சீ.வை.பி.ராம் (UNP) கொழும்பு மாநகர சபை தேர்தலில் மேயர் வேட்பாளராக

எதிர்வரும் கொழும்பு மாநகரசபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் மேயர் வேட்பாளராக தன்னை நிறுத்துமாறுகோரி கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் கடிதமொன்றை கையளித்துள்ளதாக மேல்மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜே.எம். முஸம்மில் தெரிவித்துள்ளார். மேயர் வேட்பாளராக போட்டியிடுவதற்காக வேண்டி மாகாணசபை உறுப்பினர் பதவியையும் இராஜினாம செய்ய தயார் என ஏ.ஜே.எம். முஸம்மில் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர்களில் ஒருவரான சீ.வை.பி.ராம் கொழும்பு மாநகர சபை தேர்தலில் மேயர் வேட்பாளராக போட்டியிடலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: