வெள்ளி, 9 ஜூலை, 2010

வெள்ளவத்தை பகுதியில் உள்ள மக்களை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக

இலங்கை முழுவதும் பொலிஸ் பதிவுக்கு உத்தரவு-பொலிஸ் பேச்சாளர்

கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் உள்ள மக்களை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரசாந்த ஜெயகொடி தமிழ்மிரர் இணையதளத்திற்கு சற்று முன் தெரிவித்தார்.

இப்பதிவு நடவடிக்கை வெள்ளவத்தை பகுதியில் மாத்திரமல்லாமல் முழு இலங்கை முழுவதும் இடம்பெறவுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர்  பிரசாந்த ஜெயகொடி குறிப்பிட்டார்.

இந்த பதிவு மேற்கொள்ளப்படுவதற்கு  பிரதான காரணம் என்னவென்று வினவிய போது, இந்த பதிவு நடவடிக்கை  பொலிஸ் கட்டளை சட்டத்தின் கீழ் இடம்பெறுகின்றது என பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார். (RA

கருத்துகள் இல்லை: