சனி, 10 ஜூலை, 2010

கே.பி. யின் 18 கப்பல்களுக்கும் வெளிநாட்டிலுள்ள 500 பெற்றோல் நிரப்பு நிலையங்களுக்கும் வியாபாரத்திற்கும்


கே.பி.யின் பணத்தில் வன்னி மக்களுக்கு வீடுகளை அமைத்து கொடுக்கவேண்டும்: சபையில் ரணில
் (கே.பி.் புதிய படங்கள் வெளியாகியுள்ளன)
கே.பி. யின் 18 கப்பல்களுக்கும் வெளிநாட்டிலுள்ள 500 பெற்றோல் நிரப்பு நிலையங்களுக்கும் வியாபாரத்திற்கும் என்ன நடந்துள்ளது. அந்த பணத்தில் வன்னி மக்களுக்கு வீடுகளை கட்டிக் கொடுத்து இராணுவத்தினருக்கு இப்பலோகம வீடுகளை கொடுக்கவும் என எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார. சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப்.) இருக்கின்றது. எனினும் (ஐ.எம்.எப்.இரண்டு)  மெதல நிதியத்தின் செயற்பாட்டினால் மக்கள் பெரும் பிரச்சினைக்கு முகம் கொடுத்துள்ளதுடன் மக்கள் வயிற்றிலும் அடிக்கின்றது என்றார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இறுதி நாள் விவாதத்தில் கலந்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது,
வங்கி வைப்பாளர்கள் மூலமே கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. வங்கிகளில் கூடுதலான இலாபம் கிடைக்கின்றபோதிலும் அதன் பலனை வைப்பாளர்களோ, கடன் பெற்றோரோ அனுபவிப்பதில்லை, வங்கியில் வைப்பிலிடப்படும் பணத்தில் பெறுகின்ற 50 வீத இலாபத்தில் ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்கவே போதுமானதாக இருக்கின்றது.
தேசியப்பட்டியலில் இடம் கொடுக்கவில்லை என்பதற்காக என் மீது குற்றம் சாட்டுகின்றனர். அதனையும் நான் ஏலம் போட வேண்டுமோ?
1991 ஆம் ஆண்டே பெரும் சவால்களுக்கு பிரேமதாஸ முகம் கொடுத்தார். வடக்கு கிழக்கில் யுத்தம், குவைட் ஆக்கிரமிப்பு, இலங்கையர்கள் அங்கிருந்து திரும்பியமை, சுற்றுலாத்துறை வீழ்ச்சி, சோவியத்தில் பொருளாதார வீழ்ச்சி இதனால் தேயிலை விலையில் வீழ்ச்சி, ஜனாதிபதிக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இவற்றுக்கெல்லாம் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாஸா முகம் கொடுத்தார் அப்போது ஜப்பான் அரசாங்கமே உதவியது.
அவ்வாறு செய்தபோது 1991 ஆம் ஆண்டு ஐ.நா. விற்கு சென்று முறையிட்டனர். சர்வதேச நாணய நிதியம் மெதல நிதியம் மக்களின் நிவாரணத்தை கழித்துவிட்டது. சாப்பாடு இன்றி மக்கள் வாழ்வதுடன் புலமைப்பரிசில் திட்டத்திற்கு ஒரு சதமேனும் அதிகரிக்கப்படவில்லை. ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசிலையும் நிறுத்த முயற்சிக்கின்றனர்.
பல்கலைக்கழகத்திற்கு 100 கோடி ஒதுக்கப்படுகின்றது. ஐஃபா நிறுவனத்திற்கு 110 கோடி ஒதுக்கப்படுகின்றது. கடனில் அல்ல வெளிநாட்டு வியாபார கடனில் அடிபணிந்துள்ளோம். அடுத்த வருடம் வரி கூடும்.
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் இப்பலோகம வீடமைப்பிற்கு 75 கோடி ரூபா ஒதுக்கப்பட்டது. ஆனால் ஒவ்வொரு வீட்டிற்கும் 8 இலட்சம் அறவிடுவது ஏன்? அவ்வீடுகளை இராணுவத்திற்கு கொடுத்து கே.பி. பணத்தில் வன்னி ம(க்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்குமாறு கோருகின்றேன்.
கே.பி. புதிய படங்கள் வெளியாகியுள்ளன)

கருத்துகள் இல்லை: