வியாழன், 8 ஜூலை, 2010

புதுடில்லியில், நீங்கள் அனைத்து தமிழ்கட்சிகளும் ஒன்றிணைந்து வருவதன் மூலமே எம்மால் இலங்கை அரசுக்கு

இந்தியாவிற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திய அரசின் முக்கிய அமைச்சர்கள், தலைவர்களை சந்தித்து பேச்சு நடாத்தியுள்ளனர்.

இலங்கையில் மீற்குடியேற்றத்தை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனப்பிரச்சினை தீர்வுக்கு இந்தியா உதவவேண்டும் என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்த இந்திய அரசு, தமிழ்பேசும் கட்சிகள் அனைத்தும் ஒரணியில் ஒன்றுதிரண்டு வாருங்கள், கொழும்பில் ஏற்கனவே தமிழ் கட்சிகள் பல சந்தித்து தீர்வு விடயத்தில் ஒன்றிணைந்து செயற்படுவது என்று முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆகவே குறைந்தது தீர்வு விடயத்தில் நீங்கள் அனைத்து தமிழ்கட்சிகளும் ஒன்றிணைந்து வருவதன் மூலமே எம்மால் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து ஒரு சிறந்த தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் என்று இந்திய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக புதுடில்லியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: