புதன், 7 ஜூலை, 2010

யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்: சிவாஜிலிங்கம் அறிவிப்பு

இலங்கை அரசாங்கத்தின் தமிழ் எதிர்ப்பு செயல்பாடுகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் வரும் ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பு கட்சியின் தலைவர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியுள்ளதாவது,
காணாமல் போனவர்கள் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்த விபரங்களை இலங்கை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, இடதுசாரி கட்சிகள் மற்றும், காணாமல் போனவர்களை தேடும் குழுக்களின் ஒத்துழைப்புகள் பெறப்படும்.
அண்மையில் வவுனியாவில் இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட
அரசாங்கத்தில் இருந்தும், ராணுவத்தில் இருந்தும்
மிகப்பெரிய சிக்கல்களை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

யாழ்ப்பாணத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்ற பின்னர், மற்ற மாவட்டங்களிலும் இந்த ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

எங்கள் போராட்டம் தொடர்பாக இலங்கை அரசு உரிய பதில் ஒன்றை வழங்கும் வரையில், இதுபோன்ற ஆர்ப்பாட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெறும் என்றும் சிவாஜிலிங்கம் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: