வியாழன், 8 ஜூலை, 2010

கே.பி.யுடன் பேச்சுவார்த்தை நடாத்தியதில் உண்மையில்லை- டக்ளஸ் தேவானந்தா!

முன்னைநாள் புலிகளின் ஆயுதம், போதைப்பொருள் கடத்தல் முக்கியஸ்தரும் தற்போது அரச புலனாய்வுதுறையுடன் இணைந்து செயலாற்றிவரும் கே.பி. என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாதனுடன் தமிழ் கட்சிகள் பேச்சுவார்த்தை நடாத்தியதாக வெளியான செய்தியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்த உறுதி செய்ததாக வெளியான செய்தியை அவர் மறுத்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புளொட் தலைவர் சித்தார்த்தன், முன்னைநாள் வடகிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் அடங்கிய தமிழ் கட்சிகளின் தலைவர்கள் கே.பி.யை சந்தித்து பேச்சு நடாத்தியதாக வெளியான செய்தியை அமைச்சர் மறுத்துள்ளதுடன் அவ்வாறான சந்திப்பு இடம்பெறவில்லை என்றும், அவ்வாறனதொரு செய்தியை தான் உறுதி செய்யவில்லை எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை: