திங்கள், 5 ஜூலை, 2010

எதிர்க்கட்சிகளின் பாரத் பந்த தோல்வி,திருப்பூர், ஈரோடு, கரூரில் மட்டும் ஆதரவு

சென்னை: தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் பாரத் பந்த்துக்கு பெரிய அளவில் ஆதரவு கிடைக்கவில்லை. பள்ளிகள், கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள் அனைத்தும் வழக்கம் போல செயல்பட்டன. பேருந்துகள், ரயில்கள் இயங்கின.

கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் நிறைந்த மாவட்டங்களில் மட்டுமே பந்துக்கு ஓரளவுக்கு ஆதரவு இருந்தது.

மாநிலம் முழுவதும் ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் ஓரளவுக்கு இயங்கின. லாரிகள் தான் முழுமையாக ஓடவில்லை.

பெரும்பாலான கடைகள் திறந்திருந்தன. அத்தியாவசியப் பொருட்கள் பலத்த பாதுகாப்பு [^]டன் கொண்டு செல்லப்பட்டன. பால், குடிநீர் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் வினியோகம் தடையின்றி நடைபெற்றது.

தமிழகத்தில் அதிமுக தலைமையில் 7 கட்சிகள் பந்த்தில் கலந்து கொண்டுள்ளன. ஆனால், இந்தப் போராட்டத்தில் பாமக, தேமுதிக பங்கேற்கவில்லை.

கருத்துகள் இல்லை: