செவ்வாய், 6 ஜூலை, 2010

ஐ.நா,இலங்கை தமிழர்களை அகதிகளாக கருதமுடியாது : ஐ.நா தெரிவிப்பு

இலங்கையில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றகரமான சூழ்நிலை மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை கொண்டு நோக்கும் போது இலங்கைத் தமிழர்களை அகதிகளாக கருத முடியாது என ஐநா தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள சர்வதேச அகதிகள் தொடர்பான புதிய விதிமுறைக்கு அமைய இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் நிலைமைகள் சுமூகமடைந்து வருவதாகவும், இதனால் வெளிநாடுகளில் தஞ்சம் கோரும் இலங்கையர்களுக்கு உடனடி அகதி அந்தஸ்து வழங்கப்பட முடியாதென சுட்டிக்காட்டியுள்ளது. தனிப்பட்ட நபர்களின் நிலைமை மற்றும் பின்னணியை கருத்திற் கொண்டு எதிர்வரும் காலத்தில் புகலிடம் வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை: