வெள்ளி, 9 ஜூலை, 2010

500 ரூபாய் நோட்டுகளில் மதமாற்் றுமபிரசாரம,கடலோர கிராமங்களில

ராமநாதபுரம் கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டில் மதப்பிரசாரம் நடந்து வருகிறது. கடலோர கிராமங்களில், சமீப காலமாக மதப்பிரசாரம் தீவிரம் அடைந்து வருகிறது.

மாற்றுத்திறனாளிகள், கைவிடபட்டோர், கருணாலயங்களுக்கு சென்று போதனைமூலம் மதமாற்றும் பிரசாரம் நடைபெற்றன. மொபைல் போன், இமெயில் போன்றவற்றையும் பிரசார கும்பல் விட்டுவைக்கவில்லை. தற்போது, கடலோர கிராமங்களில் ரூபாய் நோட்டுகள் வழங்கி பிரசாரம் செய்வதாக தகவல்கள் வந்தன. பணத்தின் இருபுறமும் பிரசார வாசகங்களை அச்சிட்டு, வினியோகிப்பதாகவும் கூறப்பட்டது. அதை உறுதி செய்யும் விதமாக , இதன் ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்துக்கு வந்துள்ளன. பெரும்பாலும் 500 ரூபாய் நோட்டுகளில் தான், இந்த பிரசாரம் மேற்கொள்ளப் பட்டுள்ளதால், நபர் ஒருவருக்கு எவ்வளவு பணம் தரப்பட்டது என்பது புதிராக இருந்து வருகிறது. பெரிய அளவில் பணம் வினியோகித்து, குறிப்பிட்ட சிலரை மதமாற்றம் செய்ய முயன்றதும் அம்பலமாகியுள்ளது. இதன் காரணமாக, பணப்புழக்கம் ஜரூராக இருப்பதால், தேர்தலுக்கு முன்பாகவே பல கடலோர கிராமங்கள் களை கட்டி வருகின்றன. பணத்தை பெற்றவர்கள், தேவைகளுக்காக அவற்றை புழக்கத்தில் விட்டதால், மறைமுகமாக நடந்து வந்த குட்டு, தற்போது அம்பலமாகி உள்ளது. ஏழ்மை நிலையில் வாடுவோரை குறிவைத்து மதமாற்ற பிரசாரம் மேற்கொண்டு வருவதாக வந்த புகாரும் இதன் மூலம் உறுதிசெய்யப் பட்டுள்

மதமாற்றம் செய்யகூடாது என்று சொல்பவர்கள், கூன்பாண்டியனையும் மங்கையர்க்கரசியையும் திருஞானசம்பந்தர் சித்து வேலைகள் மூலமாக சமணமதத்திலிருந்து சைவ மதத்தித்கு மாற்றியதை எப்படி நியாயப்படுத்துவார்கள்? சரி , கூன்பாண்டியன் முன்னாள் சைவ மதத்தவர் என்று சொல்லலாம். மதம் மாற மறுத்த ஒரே காரணத்திற்காக 8000 சமணர்களை கழுவிலேற்றி கொன்றதுதான் நமது ஹிந்து மதம். புத்த மதத்திலிருந்து மாற மறுத்த ஒரே காரணத்திற்காக மாமன்னர் அசோகரின் மகனான பிரகத்ரதனையும் பல்லாயிரம் புத்த பிட்சுக்களையும் கொன்ற மகானுபாவர் புஷ்யமித்ரசுங்கன் வாழ்ந்த நாடு நமது ஹிந்துஸ்தானம். இதை எல்லாம் எப்படி நியாயபடுத்துவார்கள்? இதெல்லாம் அவாளுக்கு தப்பு இல்லை. ஏனென்றால் இந்த மதங்களெல்லாம் பார்ப்பனர்களை உயர்வு படுத்தவில்லை. மனிதனை மனிதனாக பார்த்தன. உடனே அவாளுக்கு பொத்துக்கொண்டு வந்துடுத்து. இந்த மதங்களை எல்லாம் உண்டு இல்லைனு பண்ணிட்டா. அதே கோபம்தான் இப்போது கிறிஸ்தவ மதத்து மேலேயும் இஸ்லாம் மேலேயும். வர்ணஷ்ரமம், பிராமண ஆதிக்கம், குலக்கல்வியை ஆதரிக்காத எந்த ஒரு மதமானாலும் தத்துவமானாலும் அவாளுக்கு பத்திண்டு வரும். அட, ஹிந்து மதத்திலேயே கபாலிகம், லோகாயதம்,புரோகிதம்னு பல பிரிவுகள் உண்டு. அதிலே புரோகிதம் மட்டும்தான் பார்பனர்களுக்கு ஏற்ற கொள்கை உள்ளதுனுட்டு அதை மட்டும் தான் ஹிந்து மதமாக பிரசாரம் பண்ணுவா. பிராமண ஆதிக்கத்துக்கு துணை புரியாத கபாலிகம், லோகாயதம் போன்ற பிற ஹிந்து மதங்களை அழித்த இவாள் மதமாற்றம் பற்றி பேசுவதா?...

கருத்துகள் இல்லை: