செவ்வாய், 6 ஜூலை, 2010

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் ஒருவரை, வன்முறை கும்பல் தாக்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர் ஒருவரை, வன்முறை கும்பல் தாக்கியுள்ளது.ஆஸ்திரேலியாவில் ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த ஓராண்டாக, இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. கடந்த வாரம் மெல்போர்னின் ரிங்வுட் பகுதியில் பணி முடித்து விட்டு திரும்பிய மாணவர் ஹர்வீர் சிங்கை, 17 வயதுடைய ஐந்து பேர் கொண்ட கும்பல் துரத்தியது. அவர்கள் ஹர்வீர் சிங்கை பணம் கேட்டு தாக்கினர்.

தாக்குதலை சமாளிக்க ஹர்வீர் சிங் தன்னிடமிருந்த கத்தியை காட்டி மிரட்டி, அவர்களிடமிருந்து தப்பி போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்தார்.இது குறித்து, விக்டோரியா மாகாண போலீஸ் அதிகாரி டிரிவோர் கார்டர் குறிப்பிடுகையில், "இந்தியர்கள் மீதான தாக்குதல் ஏன் நடைபெறுகிறது என்பது இன்னும் கண்டறியப்படவில்லை. இருப்பினும், இது போன்ற தாக்குதல்கள் சமீப காலமாகக் குறைந்துள்ளன. நூற்றுக்கும் அதிகமான போலீசார் இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்' என்றார்.

கருத்துகள் இல்லை: