![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgpXPTJr7nHq7jGsfAmAXQpiRLRLacbTwswwJvGxu1zmirR6mf1d9qX7SSumVXaB-x7s4kgWEiwH-vd4re1QID5fAivaf_4VavIeMw1hKfGtD1dnVWtF6HCQn6nmq3X_Rh3h7pIgn1RIYdY/s320/78364381_2814957151858164_2396248248273600512_n.jpg)
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgqfBVvfnqj7ejWrRp4rA9VcRAc6CHKEaY5Lwr_7JoqhxzaSgqg4vqYa9SytinAk9VE1hdteDWmcka7mKsJNOsfPogS8s73y6zMdS8atj0jz5YGJWZguLjvWAVRd7o7_WBd4dPEKK8xsPt9/s400/80193847_2799516796777920_8998053559970824192_n.jpg)
நீங்கள் முட்டாள்கள் என்று காலம் பதிவு செய்யும்.
இது வெறும் வசனம் அல்ல .. நடந்த ... நடந்து கொண்டிருக்கும் வரலாற்று பாடம் இது .
சாதாரண மனிதர்கள் எழுப்பும் நியாயமான கேள்விகள் பலவீனமானவை அல்ல ..
அதிகாரத்தின் உச்சியில் இருப்போர் அகம்பாவத்தில் உறைந்திருந்தால் அந்த சாதாரண மக்களின் சுட்டு விரல்கள் பலவீனமானதாக காட்சி அளிக்கக்கூடும்.
அது பலவீனமானதா அல்லது பலம் வாய்ந்ததா என்பதை காலம் அவர்களுக்கு கண்டிப்பாக காட்டும்.
சாதாரண மனிதர்களின் நியாயமான கேள்விகள் வெறும் சாதாரண மனிதர்களின் உதறி தள்ளி விடக்கூடிய கேள்விகள் அல்ல.
அவை பெரும் மக்கள் கூட்டத்தின் உள்ளத்தில் இருக்கும் கேள்விகளின் ஒற்றை சுட்டு விரல் வடிவம்.
பெயர் தெரியாத இந்த டெல்லி மாணவியின் நீட்டும் சுட்டு விரல் உங்களின் அத்தனை அதிகாரத்தையும் துவம்சம் செய்து விடும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக