நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பாமக சார்பில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டவர் பாமக வழக்கறிஞர் பாலு.
இந்நிலையில் இன்று காலை திமுக தலைவர் கருணாநிதியை பாமக வழக்கறிஞர் சந்தித்தாக கூறப்படுகிறது.
மேலும் கம்யூனிஸ்ட் தலைவர்களையும் சந்தித்தார் பாலு. இதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவை மாலையில் போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சந்திப்பின் போது பாமக நிறுவனர் ராமதாஸ் கொடுத்த கடிதம் ஒன்றை அனைவரிடமும் கொடுத்தாகவும் கூறப்படுகிறது. அந்த கடிதத்தில் மருத்துவ நுழைவு தேர்வு ரத்து செய்வது தொடர்பான கடிதமாகவே அல்லது வன்கொடுமை தடுப்பு சட்ட திருத்தம் தொடர்பான கடிதமாகவே இருக்கலாம் என கூறப்படுகிறது. /tamil.oneindia.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக