இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய, அ.தி.மு.க., நிர்வாகிகள்,
நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோரை குற்றவாளிகள் என,
அறிவித்த, சேலம் நீதிமன்றம், துாக்கு
தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதை, சென்னை ஐகோர்ட்டும், சுப்ரீம்
கோர்ட்டும் உறுதி செய்தன. இந்தத்தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி, தண்டனை
பெற்றவர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், சுப்ரீம் கோர்ட்டில்,
நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், அருண்மிஸ்ரா மற்றும் பிரபுல்ல சி.பந்த் அடங்கிய
அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, முனியப்பன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எல்.நாகேஸ்வர ராவ் வாதிட்டதாவது: மூன்று மாணவிகள் பலியானது திட்டமிட்டு நடந்ததல்ல; கட்சித் தலைவர் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட உணர்ச்சிவசத்தால் நிகழ்ந்தது. கட்சித் தொண்டர்கள், தங்கள் தலைவர்கள் மீது அதீத அன்பு வைத்திருக்கின்றனர். தலைவர்களுக்கு ஏதேனும் நிகழ்ந்து விட்டால், அவர்கள் போராட்டம் நடத்துவதுமட்டுமின்றி, தற்கொலையும் செய்து கொள்கின்றனர். எனவே, மூவரின் துாக்கு தண்டனையையும், ஆயுளாகக் குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதையடுத்து, நீதிபதிகள், 'துாக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதாக இருந்தால், எத்தனை ஆண்டுகள் அவர்கள் சிறையில் இருக்க வேண்டும்' என, தெரிவிக்கும்படி கூறி, வழக்கின் விசாரணையை, மார்ச், 11க்கு தள்ளிவைத்தனர். 'தெய்வமாக வணங்குகின்றனர்':
தண்டனை
பெற்ற ரவீந்திரன், நெடுஞ்செழியன் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர்
சுஷில்குமார் கூறியதாவது: ஜெயலலிதா தண்டிக்கப்பட்டதால், அரசு
சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில், பல்கலைக்கழக
பஸ்சுக்கு தீ வைத்தனர். அதில், மூன்று மாணவியர் பலியானது,
துரதிருஷ்டவசமானதே. கட்சித் தொண்டர்கள், தங்கள் தலைவர்களை தெய்வமாக
வணங்குகின்றனர். பெங்களூரு நீதிமன்றம், ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கிய
போதும், தொண்டர்கள் தற்கொலை செய்து கொண்டனர். அதனால், தண்டனையை கு தினமலர்.com அப்போது, முனியப்பன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எல்.நாகேஸ்வர ராவ் வாதிட்டதாவது: மூன்று மாணவிகள் பலியானது திட்டமிட்டு நடந்ததல்ல; கட்சித் தலைவர் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட உணர்ச்சிவசத்தால் நிகழ்ந்தது. கட்சித் தொண்டர்கள், தங்கள் தலைவர்கள் மீது அதீத அன்பு வைத்திருக்கின்றனர். தலைவர்களுக்கு ஏதேனும் நிகழ்ந்து விட்டால், அவர்கள் போராட்டம் நடத்துவதுமட்டுமின்றி, தற்கொலையும் செய்து கொள்கின்றனர். எனவே, மூவரின் துாக்கு தண்டனையையும், ஆயுளாகக் குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதையடுத்து, நீதிபதிகள், 'துாக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதாக இருந்தால், எத்தனை ஆண்டுகள் அவர்கள் சிறையில் இருக்க வேண்டும்' என, தெரிவிக்கும்படி கூறி, வழக்கின் விசாரணையை, மார்ச், 11க்கு தள்ளிவைத்தனர். 'தெய்வமாக வணங்குகின்றனர்':
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக