இந்த அறிவிப்பு ப.சிதம்பரம் மற்றும் தங்கபாலு ஆதரவாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சிதம்பரம் ஆதரவாளர்கள் நேற்று சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் கூடினார்கள். அந்த கூட்டத்தில் முன்னாள் எம்.பி.அழகிரி, கராத்தே தியாகராஜன் உட்பட 8 மாவட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்
அடுத்த கட்டமாக என்ன செய்யலாம் என்று அவர்கள் விவாதித்ததாக தெரிகிறது. முடிவில் மார்ச் மாதம் 4ஆம் தேதி சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் தங்கபாலு, கிருஷ்ணசாமி ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெப்துனியா.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக