மேல்முறையீட்டு மனுக்களை வழக்கமாக விசாரணை செய்யும் நீதிபதிக்கு அனுப்ப உத்தரவிட்டார். நீதிபதியின் மறுப்பால் மனு வரும் 7ம் தேதிக்கு விசாரணைக்கு வரும் என்று தெரிகிறது. ;
நீதிபதி ரத்னகலா - சிறு குறிப்பு:58 வயதான இவர் 1982-ம் ஆண்டு வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார்.கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக குற்றவியல் வழக்குகளில் வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார்.1996-ம் ஆண்டு மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்ற இவர் பெங்களூர், ஷிமோகா, சிக்மகளூர் ஆகிய மாவட்டங்களில் கூடுதல் மற்றும் முதன்மை அமர்வு நீதிமன்றங்களில் நீதிபதியாக இருந்துள்ளார்.கடந்த 2013-ம் ஆண்டு கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவியேற்ற இவர் தற்போது குற்றவியல் மற்றும் சிவில் வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்து வருகிறார்.>குற்றவியல் வழக்குகளில் அனுபவம் மிகுந்த இவர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான ஜாமீன் மனுவை விசாரித்து தீர்ப்பளிக்க இருக்கிறார். nakkheeran.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக