ஞாயிறு, 10 அக்டோபர், 2010

இதய நோய்கள் சராசரியாக சராசரியாக30 வயதுக்கு மேல்தான் தாக்கும். இன்று அந்த வரிசையில்

பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை இதய நோய்கள் சராசரியாக 40 வயதுக்கு மேல்தான் தாக்கும். இன்று அந்த வரிசையில் 30 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

நம் உடல் உறுப்புகளில் மிக முக்கியமானது இதயம்தான். அந்த இதயத்தின் சீரான இயக்கம், அது பாதிக்கப்படும்போது ஏற்படும் பிரச்னைகள், அதற்கான தீர்வுகள் பற்றி அழகாகவும், ஆழமாகவும் சொல்கிறது இந்த குட்டிப் புத்தகம். விஷயங்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்!
"எப்படி இயங்குகிறது என் ஆசை இதயம்..?!"
இதயம் பற்றிய அடிப்படை புரிதல் இருந்தால்தான், அதன் பிரச்னைகள், தீர்வுகள் பற்றி அறிந்து கொள்வது எளிதாக இருக்கும். உங்கள் இதயத்தின் இயக்கத்தை தெரிந்துகொள்ள, இதைப் படியுங்கள்...
1. இதயம் சுருங்கி சுருங்கி புதிய சுத்த ரத்தத்தை, ரத்த நாளங்களில் செலுத்தும்போது, ரத்த அழுத்தம், உச்சத்தை அடைகிறது. இது 'சிஸ்டாலிக் பிரஷர்' (Systolic Pressure) அல்லது இதயம் சுருங்கும் ரத்த அழுத்தம் எனப்படும்.
2. தொடர்ந்து, இதயம் விரியும்போது, புதிய சுத்தமான ரத்தத்தால், இதயம் நிரப்பப்படுகிறது. இச்சமயத்தில் ரத்தம் அழுத்தம் சற்றே குறைவான அளவே இருக்கும். இது 'டயஸ்டாலிக் பிரஷர்' (Diastolic Pressure) அல்லது இதயம் விரியும் ரத்தம் அழுத்தம் எனப்படும்.
3. தேசிய கூட்டுக் குழுவினர் - உயர் ரத்தம் அழுத்தம் தடுத்தல், கண்டறிதல், மதிப்பிடுதல் மற்றும் சிகிச்சை அளித்தல் பற்றிய ஏழாவது அறிக்கையின்படி, ரத்த அழுத்த வகைகளை இப்படித்தான் முறைப்படுத்துகிறார்கள்...
4. உங்களுக்குப் பிரஷர் பார்க்கும்போது, 'BP=110/70' என்று ஒரு அளவைக் குறிப்பிடுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். இதில்... 110 என்பது சிஸ்டாலிக் பிரஷர், 70 என்பது டயஸ்டாலிக் பிரஷர் ஆகும்.
இத்தனை இருக்கின்றன இதயநோய்கள்!
இதயத்தின் சீரான இயக்கம் தடைபடும்போதோ, தடுக்கப்படும்போதோ இதயம் நோய்க்கு ஆட்படுகிறது. சிறுவர்கள் முதல் முதியோர்கள் வரை யாரையும் தாக்கவல்ல இதய நோய்கள் பலப்பல. அவற்றுள் முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டிய சில நோய்கள் இவை...
5. பிறவியிலேயே உள்ள இதயநோய்... பிறவியிலேயே குழந்தையைப் பாதிக்கும் இந்த முதல் வகையில் நீலம் பூக்காத இதய நோய் (Acyanotic), மற்றும் நீலம் பூக்கும் (Cyanotic) இதய நோய் என்று இரு பிரிவுகள் உண்டு.
6. பிறவியிலேயே வரும் நீலம் பூக்காத இதய நோய்களில்... இதய மேலறைகளைப் பிரிக்கும் இடைச்சுவரில் துவாரம் மற்றும் குறைபாடு, இதயக் கீழறைகளைப் பிரிக்கும் இடைச்சுவரில் உள்ள குறைபாடு என்று ஆரம்பித்து பல்வேறு நோய்கள் உள்ளன.
7. நீலம் பூக்கும் இதய நோய்களில் பல பிரிவுகள் இருக்கின்றன. இதில், நான்கு வகையான குறைபாடுகள் சேர்ந்தாற்போல் அமையும் 'டெட்ராலஜி ஆஃப் ஃபேலட்' (Tetralogy of Fallot) என்ற நோயே மிக அதிக அளவில் காணப்படும் நோயாகும்.
8. பொதுவாக, நீலம் பூக்கும் இதயக் கோளாறுகள் என்ற வரிசையில் வரும் நோய்கள், ஆபத்தை விளைவிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.
9. கீழ்வாதக் காய்ச்சல் நோய் எனப்படும் 'ருமாட்டிக் காய்ச்சல்' காரணமாக ஏற்படும் இதயநோய் (Rheumatic Heart Disease). மிகவும் அதிகமாக இதய வால்வுகளைத் தாக்கி, இளவயதினரிடையே இதயநோயை உண்டாக்குகின்றது.
10. இதய ரத்தநாள அடைப்பால் மார்புவலி மற்றும் மாரடைப்பு நோய் (Coronary Artery Disease, Myocardial Infarction) ஏற்படும்.
11. இதயம் இயங்கத் தேவைப்படும் பிராணவாயு, கொரனரி ரத்தக்குழாயின் மூலம் கிடைக்கும் ரத்தத்தைக் கொண்டு செயல்படுகிறது. இந்த கொரனரி ரத்த நாளங்களில் கொழுப்புச் சத்து படிந்து... அடைப்பு ஏற்பட்டால், இதய தசைக்கு ரத்த ஓட்டம் குறைந்து, இதய ரத்தநாள நோய் உண்டாகும்.
12. 'ஆஞ்ஜைனா' என்று அழைக்கப்படும் நெஞ்சுவலி, இந்நோயின் அறிகுறி. நெஞ்சு வலியின் தன்மை, அழுத்தம் உண்டாவது போன்று நெருக்குவது அல்லது கசக்கிப் பிழிவது போன்றது என பலவிதமாக விவரிக்கப்படும்.
நெஞ்சுவலி நடுமார்பில் தோன்றி, அங்கிருந்து பரவி கழுத்து, தாடை, இரு கைகள் (பெரும்பாலும் இடது கை) மற்றும் முதுகுப்புறம் வரை பரவக்கூடும். இந்த வலியுடன் மூச்சுத் திணறல், உடல் வியர்த்தல் போன்றவை ஏற்படலாம். இந்த அறிகுறிகள் எல்லாம்.. ஆஞ்ஜைனா வந்துவிட்டது என்பதை நமக்கு உணர்த்தும்!
13. அதிக உடல் உழைப்பு மற்றும் மன உளைச்சல் காரணமாக நெஞ்சுவலி உண்டாகலாம். அப்போது ஓய்வு எடுத்துக் கொண்டாலோ, அதற்குரிய மாத்திரையை நாக்குக்கு அடியில் வைத்து சப்பிக் கொண்டாலோ... வலி நீங்கிவிடும்.
14. 'ஆஞ்ஜைனா' நெஞ்சுவலி நிலை, சுமார் 15-20 நிமிடங்களுக்கு மேல் நீடிக்குமேயானால், இதய தசையில் ஒரு பகுதி போதிய பிராணவாயுவை பெற முடியாமல் சிதைந்து, மாரடைப்பு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
15. மாரடைப்பு நோய் ஏற்பட்டால், மருத்துவக் கவனிப்பு உடனே அவசியம்.
16. மாரடைப்பு நோய் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்வதன் மூலம், இந்நோயாளிகள் நன்கு சிகிச்சை பெற்று, உயிரிழப்பு ஆபத்தைக் குறைக்கலாம்.
17. புகை பிடித்தல் மற்றும் புகையிலை உபயோகித்தல், ரத்தக் கொழுப்பு அளவு அதிகரித்தல், உயர் ரத்த அழுத்தம், 'டயாபடிஸ்' எனப்படும் சர்க்கரை நோய், உடல் பருமன், உடற்பயிற்சியின்மை, உடல் உழைப்பின்றி அதிகம் உட்கார்ந்து கழிக்கும் வாழ்க்கை முறை... இவையெல்லாம், கொரனரி ரத்த நாள மற்றும் மாரடைப்பு நோயைத் தோற்றுவிக்கக்கூடிய சில அபாயக் காரணிகள்.
18. உயர் ரத்த அழுத்தத்தின் விளைவாக இதயம், மூளை, சிறுநீரகம் மற்றும் கண்கள் பாதிக்கப்படலாம்.
19. இதய பாதிப்பு ஏற்படும்போது மாரடைப்பு நோய், இதயச் செயலிழப்பு, பக்கவாத நோய், மூளையின் ரத்த நாளங்களில் வெடிப்பு ஏற்பட்டு, ரத்தச் சிதறல் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
பரிசோதனைகள்... விழிப்பு உணர்வுக்கு!
'ஆண்டுக்கு ஒருமுறையாவது உடல் உறுப்புகளை பரிசோதனை செய்து கொள்ளுங்கள்' என்பதுதான் மருத்துவர்கள் தரும் ஆரோக்கிய டிப்ஸ். நோயால் பாதிக்கப்பட்டவர்களும் அனுபவத்தின் வாக்குமூலமாக சொல்வது இதைத்தான். 40 வயதுக்கு மேல் சில அடிப்படை பரிசோதனைகளை செய்து கொள்வது அவசியம் என்கின்றன தினசரி மருத்துவச் செய்திகள். என்னென்ன சோதனைகள் செய்ய வேண்டும்..?
20. உலகத்திலேயே இந்தியாவில்தான் இதயநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என்கிறது கணக்கெடுப்பு. மேலும், 2020-ல் இதன் பாதிப்பு இன்னும் அதிகமாகலாம் என்கின்றனர் இதயநோய் நிபுணர்கள். 'நானெல்லாம் ஆரோக்கியமாதான் இருக்கேன்...' என்ற உங்களின் நம்பிக்கையை சரிபார்க்க, பரிசோதனைக்குத் தயாராகுங்கள்.
21. முதலில் செய்ய வேண்டிய சோதனைகள்... ரத்தப் பரிசோதனை (சர்க்கரை அளவு) மற்றும் சிறுநீர் பரிசோதனை. அடுத்து உயர் ரத்த அழுத்த பரிசோதனை.
22. வெறும் வயிற்றோடு இருக்கும்போது சர்க்கரையின் அளவு 100 மில்லி கிராம் என்ற அளவிலும், சாப்பிட்ட ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு 180 மில்லி கிராமாகவும் இருக்க வேண்டும். இந்த அளவுகளுக்கு மேல் அதிகரித்தால், உடலில் இதயம் சம்பந்தமான பிரச்னைகள் வருவதற்கான எச்சரிக்கை மணி அடிக்கப்படுகிறது என்று அர்த்தம்.
23. பரிசோதனைகளின் முடிவு, இதயம் சம்பந்தமான பிரச்னைகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தை வலுப்படுத்தினால்... தாமதிக்காமல் இ.சி.ஜி (E.C.G) பரிசோதனை செய்து பார்ப்பது ஆபத்தில் இருந்து நம்மைத் தள்ளி வைக்கும்.
24. இதயம் சம்பந்தமான நோய்கள் இருப்பது உறுதியாகிவிட்டால், அடுத்தகட்டமாக... ட்ரெட்மில் (Treadmill) எனும் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும்.
25. நோய் உறுதிபட்டவர்கள் ஆண்டுக்கு ஒரு தடவை நிச்சயமாக 'ஆஞ்சியோகிராம்' (Angiogram) பரிசோதனை எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலமாகவே உடலில் உள்ள இதயக் கோளாறுகளை அறிய முடியும்.
26. இப்போதெல்லாம் நிறைய பேருக்கு வலி இல்லாமலேகூட மாரடைப்பு வருகிறது. இதில் அதிக அளவு பாதிக்கப்படுகிறவர்கள்... வயதானவர்கள்தான். அதனால், தகுந்த இடைவெளியில் இதய பரிசோ தனை அவசியம்.
பெரும்பாலான ஹோட்டல்கள், ஃபாஸ்ட் ஃபுட் கடைகள்... இங்கெல்லாம் என்ன மாதிரியான எண்ணெயில் சமைக்கிறார்கள் என்பதே யாருக்கும் தெரியாது. அப்படியிருக்க... அங்கு விற்கப்படும் எண்ணெய் வழியும் பரோட்டா, சில்லி பரோட்டா, இறைச்சி, கொழுப்பு உணவுகளை வாங்கி உண்பது என்பது, ஆபத்துக்கு நாம் வைக்கும் வெற்றிலை-பாக்கு உபசரிப்பு.
51. 'நாங்கள்லாம் ரொம்ப மாடர்ன்' என்று காட்டிக் கொள்வதுபோல பீட்சா, பர்கர், ஸ்பிரிங்ரோல், சிப்ஸ், சாட் உணவுகள் என்று விழுங்குவதைத் தவிர்க்கவும்.
இதய பாதுகாப்புக்கு மூலிகை மருத்துவம்!
பரபரப்பு, தொடர் ஓட்டம் என மாறிவிட்ட வாழ்க்கை முறையால், நம் கையருகேயும் கைக்குள்ளும் இருக்கும் மூலிகை வைத்தியங்கள் நமக்கு மறந்து போய்விட்டன. வீட்டுப் புழக்கடையில் நம் ஆரோக்கியத்துக்கான அத்தனை விஷயங்களும் அழகாக பூத்துக் கிடந்த காலமும் மறைந்து போனது. அதன் எதிரொலியாக விதவிதமான நோய்கள், பிரச்னைகள் நம்மை ஆக்கிரமித்துவிட்டன. இதயநோயை நெருங்கவிடாமல் செய் யும் மூலிகை வைத்தியங்கள் என்னென்ன?!
52. இதயநோயை குணப்படுத்துவதில் இயற்கை மருத்துவத்துக்கு தனிப்பெரும் பங்கு உண்டு. வீடுகளில் வளர்க்கப்படும் செம்பருத்தி பூவின் இதழ்களை மட்டும் தனியாக எடுத்து, காலையில் கண் விழித்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால்... இதய நோய்கள் வராமல் தடுக்க முடியும். இதய நோய் உள்ளவர்கள் இதைச் சாப்பிட்டு வந்தாலும் நோயின் பாதிப்பு மெள்ள மெள்ள குறையும்.
53. செம்பருத்திப்பூ இதழ்களை நீர்விட்டுக் காய்ச்சி, சர்க்கரை சேர்த்து அருந்தி வந்தால்... இதயநோயின் தீவிரம் குறையும்.
54. ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பை இஞ்சி சரி செய்கிறது. அந்த வகையில், இஞ்சிச் சாறு அல்லது இஞ்சி ஜூஸ் அருந்தி வந்தாலும் இதய நோயிலிருந்து காத்துக் கொள்ளலாம். இஞ்சிச் சாறுடன் கொஞ்சம் தேனும் கலந்து அருந்தலாம்.
55. ஒரு டம்ளர் தண்ணீருக்கு, இஞ்சிச் சாறு 25 மில்லி, அரைமூடி எலுமிச்சைச் சாறு, சுவைக்கு ஏற்ப தேன், சர்க்கரை சேர்த்தால் இஞ்சி ஜூஸ் ரெடி!
56. இஞ்சியைத் துவையல், ஊறுகாய் மற்றும் சுக்கு என பல வடிவங்களில் உணவில் சேர்த்துக் கொண்டாலும் இதயநோயை வெல்லலாம்.
57. பூண்டு, உடலில் உள்ள கொழுப்புச்சத்தை எளிதாகக் குறைக்கக் கூடியது. தொடர்ந்து மூன்று மாதங்கள் வெள்ளைப் பூண்டு சாப்பிட்டு வந்தால், உரிய நிவாரணம் கிடைக்கும்.
58. பொதுவாக வெள்ளைப் பூண்டை பச்சையாக சாப்பிடுவதைவிட... வேக வைத்தோ, தீயில் சுட்டோ சாப்பிடுவது நல்லது.
59. சின்ன வெங்காயத்தை சாறு எடுத்து, சர்க்கரை சேர்த்து அருந்தி வந்தால்... இதயம் பலப்படும். தொடர்ந்து 7 நாட்கள் செய்து வந்தால் உரிய நிவாரணம் கிடைக்கும்.
மனமே மருந்து!
'நல்லாயிருக்கீங்களா..?' என்று உங்கள் நலம் விரும்பி உங்களிடம் கேட்கும்போது, உங்களின் பதில்... 'ஆம்' என்றால், உங்கள் இதயம் நிம்மதியாக இருக்கிறது. உங்களின் பதில்... 'இல்லை' என்றால், உங்கள் இதயம் துயரத்தில் இருக்கிறது. இதுவே 'தெரியவில்லை' என்பது உங்கள் பதிலாக இருந்தால், உங்கள் இதயம் குழப்பத்தில் இருக்கிறது.
துயரத்தைத் துடைத்து, குழப்பத்திலிருந்து மீண்டு, மன அழுத்தத்தை விரட்டி, இதயத்தை மீட்டெடுக்க... பிடியுங்கள் டிப்ஸ்களை!
60. மன அழுத்தப் பிரச்னைகள் மூன்று படிநிலைகளில் வருகின்றன. அவற்றை அதன் அறிகுறிகளைக் கொண்டு எளிதில் இனம் காண முடியும். எனவே, எல்லா அழுத்த உணர்வுகளும் மன அழுத்தம் ஆகிவிடாது என்பதில் தெளிவு தேவை.
61. முதல்நிலை மன அழுத்தத்தில் உள்ளவர்கள், எந்த ஒரு செயலையும் படபடப்போடு ஆரம்பிப்பார்கள்; அதிகமாக யோசனை செய்வார்கள்; வலுவான காரணங்கள் இல்லாதபோதும் தேவையில்லாமல் அதிகம் கவலைப்படுவார்கள். எதைப் பற்றியாவது யோசிக்கும்போது, 'அதுவா... இதுவா?' என்ற சந்தேகம் மாறி மாறி எழுந்து கொண்டே இருந்தால்... மருத்துவரிடம் பதில் பெறுங்கள்.
62. இரண்டாம் நிலை மன அழுத்தத்தில் உள்ளவர்கள், 10 நிமிட வேலையை, 8 நிமிடத்திலேயே செய்ய முயற்சிப்பார்கள். அதனால், காரணமில்லாமல் சோர்வாக இருப்பார்கள்; அடிக்கடி கோபப்படுவார்கள்.
63. உச்சநிலை மன அழுத்தத்தில் உள்ளவர்களும் அதிக படபடப்புடன் இருப்பார்கள். ஆனால், இவர்களுக்கு வேலையில் ஆர்வமே இருக்காது. 'இதெல்லாம் இல்லாட்டி... நடக்காம இருந்திருந்தா... நல்லா இருந்திருக்கும்' என்று புலம்பிக் கொண்டே இருப்பார்கள்.
64. மன அழுத்தப் பிரச்னை எதுவாக இருந்தாலும், அது உங்களை ஆளுமை செய்யாமல் இருக்க வழி காணுவதுதான் பிரச்னையை வெல்வதற்கு வழி.
65. மன அழுத்தம் கவலைக்குரிய விஷயமாக மாறாமல் இருக்க... உங்கள் எண்ணங்களை, வலிகளை, கஷ்டங்களை உங்கள் நம்பிக்கைக்கு உரியவர்களுடன் பகிர்ந்து கொள்வது அவசியம். தீர்வு அவர்களிடம் இருக்கலாமே!
66. நம்பிக்கைக்கு உரியவர்களுடான எண்ணங்களின் பகிர்தலும் பிரச்னையைத் தீர்க்கவில்லை என்றால், மன அழுத்தம் பயமுறுத்தும் வகையில் அதிகரித்தால், மனநல மருத்துவரையோ, மனநல ஆலோசகரையோ அணுகுவது த£ன் சரியான தீர்வு.
67. 'டாக்டர்கிட்ட போறதுக்கு ஏது நேரம்?' என தொடர்ந்து வேலையின் பின்னாலோ, பிரச்னைகளின் பின்னாலோ ஓடிக் கொண்டே இருந்தால்... மன அழுத்தத்தால் இதயவலி, தீராத தலைவலி, தொண்டைவலி, நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு, தோல் வியாதிகள் எனப் பலவும் வரிசைகட்டி வரும்... கவனம்.

கருத்துகள் இல்லை: