ஞாயிறு, 21 நவம்பர், 2010

மாணவர்களுக்கு பாலியல் கைநூல்:கொழும்பு சர்வதேச பாடசாலை

கொழும்பில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் 11 வயது பிரிவினர் மத்தியில் சர்ச்சைக்குரிய பாலியல் கல்வி கைநூல்,ஒன்று விநியோகிக்கப்பட்டமை தொடர்பில் நாளையதினம் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்படவுள்ளது
கல்வி அமைச்சு மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆகியவை நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று. கொழும்பு மேலதிக நீதிவானிடம், இந்த கைநூல் தொடர்பாக அறிக்கை பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த கைநூலில், இனங்களில் மதிப்பு, பாலியல் சம்பந்தப்பட்ட படங்கள், மற்றவர்கள் மீது காதல் செலுத்துதல் போன்ற விடயங்கள் அடக்கப்பட்டுள்ளன.
இந்த கைநூல் தொடர்பில் குற்றம் சுமத்தப்படுகின்ற போதும், குறித்த பாடசாலையின் அதிகாரிகள், நூல் உரியமுறையில் மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளது என வாதிடுகின்றனர்

கருத்துகள் இல்லை: