வியாழன், 25 நவம்பர், 2010

ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய நீரா ராடியாவிடம் அமலாக்கப் பிரிவு

ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்பாக மக்கள் தொடர்பு நிறுவன உரிமையாளரான நீரா ராடியாவிடம் அமலாக்கப் பிரிவுஅதிகாரிகள் இன்று அதிரடி விசாரணை நடத்தினர்.

பல்வேறு முக்கிய அரசியல் பிரமுகர்களுடன் நீரா உரையாடிய ஆடியோ தகவல்கள் அமலாக்கப் பிரிவிடம் சிக்கியுள்ளது. சமீபத்தில் முன்னாள் அமைச்சர் ராஜா, கனிமொழி உள்ளிட்டோருடன் நீரா பேசியதன் ஆடியோ பதிவுகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த நிலையில் தற்போது ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக நீராவிடம் அமலாக்கப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். இந்த விசாரணைக்கு வராமல் அவர் நீண்ட நாட்களாக இழுத்தடித்து வந்தார்.

இன்று காலை அமலாக்கப் பிரிவு அலுவலகத்திற்கு வந்தார் நீரா. அவரிடம் அவருடைய நிறுவனத்திற்கும், 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை பெற்ற நிறுவனங்களுக்கும் உள்ள தொடர்பு குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

ராடியாவுக்கும், ராஜாவுக்கும் இடையிலான பேச்சு குறித்தும் விசாரிக்கப்படட்து.
பதிவு செய்தவர்: கருணா
பதிவு செய்தது: 25 Nov 2010 10:35 am
ராசான்னா தலித் வளர்வது பிடிக்கலைன்னு திசை திருப்பி அறிக்கை விடலாம், கனிமொழிக்கு என்னான்னு சொல்றது, பேசாமா திராவிடம் வளர்வது ஆரியனுக்கு பிடிக்கலைன்னு சொல்லலாமா? CBI முழுக்க ஆரியக் கூட்டமுன்னு சொல்லலாமா? இல்லை வடக்கத்தி தொலைகாட்சிகள் எல்லாம் இட்டுகட்டி சிண்டு முடியுது, மக்களே முரசொலி மற்றும் குடும்ப தொலைகாட்சிகளை மட்டுமே நம்புங்கன்னு ஒரு அறிக்கை விடலாமா?

பதிவு செய்தவர்: மாக்கான்
பதிவு செய்தது: 25 Nov 2010 10:22 am
ராடிய ஒரு தே...டிய. இவளோட ரேட்டு 60 கோடின்னா ரெம்ப ஓவர். கனிமொழியை ஒப்பிட்டால் இது ரெம்ப கம்மி.

கருத்துகள் இல்லை: