செவ்வாய், 23 நவம்பர், 2010

IAS இந்திய ரகசியங்களை விற்ற ஐஏஎஸ் அதிகாரி ரவிசிங் கைது

இந்தியாவின் ரகசியங்களை விற்றதாக டெல்லியில் ஐஏஎஸ் அதிகாரி ரவிசிங் கைது செய்யப்பட்டுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் உள்நாட்டு பாதுகாப்பு இயக்குநர் பதவியில் இருக்கும் ரவி இந்தர் சிங், இந்திய பாதுகாப்பின்  ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு கூறியதாக உளவுத்துறைக்கு சந்தேகம் எழுந்தது.
இதையடுத்து அவரது வீட்டில் ரெய்டு நடந்தது.   சோதனைக்குப்பின்னர் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரவிசிங்,1994வருட பேட்ஜ் ஐஏஎஸ் ஆவார்.  மேற்கு வங்க கேடரில் இருந்து பதவி ஏற்ற இவர் உள்நாட்டு பாதுகாப்பு இயக்குநர் பதவிக்கு வந்தார்.
உள்துறை தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த விபரங்களை வெளியிட்டார் என்று ரவிசிங் மீது உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை குற்றம் சாட்டினார்.
வணிக நிறுவனங்களுக்கு முக்கிய விபரங்களை விற்ற ரவிசிங் நடவடிக்கைகளை கடந்த ஒரு மாத காலமாக கவனிக்கப்பட்டுவந்தது.   இதன்பின்னரே அவரின் வீடு மற்றும் அலுவலகத்தின் சோதனை செய்யப்பட்டது.
சோதனைக்குப்பின் டெல்லி போலீஸ் சிறப்பு பிரிவு அவரை கைது செய்துள்ளது.

கருத்துகள் இல்லை: