செவ்வாய், 23 நவம்பர், 2010

முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட இராணுவ வீரர்களின் சடலங்கள்; விசாரிக்க குழு நியமனம் : இராணுவப் பேச்சாளர் உதய மெதவல!

முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட 26 இராணுவ வீரர்களின் சடலங்கள் தொடர்பாக பரிசீலிக்க, விசேட விசாரணைக் குழுவொன்றை அனுப்பி வைத்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் உதய மெதவல தெரிவித்தார்.இராணுவ வீரர்களின் சடலங்கள் புதைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவல் குறித்துக் கேட்டபோதே இராணுவப் பேச்சாளர் இவ்வாறு குறிப்பிட்டார்.

விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தின்போது புலிகளால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட இராணுவ வீரர்கள் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதாக ஏ.எப்.பி. நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக ஆராய்வதற்கு மருத்துவ அதிகாரிகளுடன் விசேட புலனாய்வு அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று வடக்குப் பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் இன்று முதல் அந்தக் குழு விசாரணைகளை ஆரம்பிக்கும் என இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: