சனி, 27 நவம்பர், 2010

தோழர் செந்தில்வேல் என்ன நீங்க பேசுறீங்க……


ரி.பி.சியில் நடைபெறும் அரசியல் கலந்துரையாடல்களை சில வேளை கேட்கும்போது ஒரே நகைச்சுவையாக இருக்கும். அரசியல் தலைவர்கள் பங்குபற்றும் நிகழ்ச்சியென்றால் அது சில சமயங்களில் காnடியாக இருக்கும்.
போன வியாழக்கிழமை நடைபெற்ற அரசியல் கலந்துரையாடலில் தற்போது ஐரோப்பாவில் நிற்கும் புதிய ஜனநாயக மாக்சிய லெனிய கட்சியின் தலைவர் தோழர் செந்தில்வேல் அவர்கள் தொலைபேசியூடாக கலந்து கொண்டார்.
கடந்தகாலங்களில் புலிகளின் போராட்டத்தை பகிரங்கமாக ஆதரித்த கட்சிகளில் தோழர் செந்தில்வேல்  அவர்களின் பு.ஜ.மா.லெ.கட்சி முக்கியமானது. புலிகளின் அராஜகங்களுக்கு எதிராக குரல் கொடுக்காமல் புலிகளை ஆதரித்து நின்றது. புலிக்கும் இடதுசாரிக்கொள்கை களுக்கும் ஏழாம் பொருத்தம். வர்க்கப்போராட்டம் என்றால் கிறுக்குப்போராட்டம் என விளக்கம் கொடுக்கும் புலிகளின் போராட்டத்தில் என்ன நியாயத்தை கண்டு பு.ஜ.மா.லெ.கட்சி ஆதரித்ததோ தெரியவில்லை.
தற்போது புலிகள் இல்லை. தோழர் செந்தில்வேல் புலிகளையும் விமர்சனத்திற்கு உட்படுத்துகிறார். நல்ல விடயம். தமிழ்மக்கள் மத்தியில் இருந்த கொஞ்ச நஞ்ச இடதுசாரிச் சிந்தனைகளுக்கு ஆப்பு வைத்ததே புலிகள் இயக்கம் அது ஆடிய கரகாட்டத்தில் எல்லாச் சிந்தனைகளும் மழுங்கடிக்கப்பட்டு புலியிசம் மட்டுமே தமிழ்மக்கள் கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டிய கொள்கையாக இருந்தது.
அப்போதெல்லாம் தோழர் செந்தில்வேல் போன்றவர்களால் புலியை எதிர்த்துப்போராட முடியவில்லை. அப்படி எதிர்த்திருந்தால் என்னவாகியிருப்பார் என்பதை நாங்கள் சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை.
தற்பேதைய நிலமை என்ன. புலிகள் இல்லை. தோழர் செந்தில்வேல் அவர்களால் சுதந்திரமாகப் பேசமுடிகிறது. அரசாங்கத்தையும் புலிகளையும் ஏன் தமிழ்கட்சிகளையும் பகிரங்கமாக விமர்சிக்க முடிகிறது.
இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது. இதற்காக யார் யார் எல்லாம் போராடினார்கள். இது தெரியாதா தோழர் செந்தில்வேல் அவர்களுக்கு
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தோழர் செந்தில்வேல் அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை என்பதே எமது கருத்து. எல்லாவற்றிற்கும் மாக்சிய நிலைப்பாட்டையே உதாரணமாக காட்டிய அவர் நடைமுறை பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பாக தெளிவாக விளக்கத்தை தரமுடியவில்லை.
எல்லாமே பிழை என்கிற போக்கு ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதென்றால் சரியானது எது. அது ஏன் மக்கள் மத்தியில் உருவாக்கப்படவில்லை என்கிற கேள்விகள் உள்ளன. தீவிர மாக்சியம் பேசுகிறவர்கள் சிலர் எல்லாமே பிழை என்று சொல்கிறார்களே தவிர சரியான திசைக்கு மக்களை வழிநடாத்திச்செல்கின்ற தலைமையை உருவாக்க முடியாமல் திக்கு முக்காடி நிற்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
கருத்து மக்களை பற்றிக்கொண்டால் சக்தியாக உருவடுக்கும் என சொல்லப்படுகின்ற கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதுதான். கடந்த 30வருடமாக புலியிசத்தில் நனைந்து தடிமல் பிடித்துப்போய் நிற்கிற தமிழ்மக்கள் மத்தியில் பற்றிக்கொள்ளக்கூடிய நிலையில் இடதுசாரிச்சிந்தனைகள் மழுங்கடிக்கப்பட்டு நிற்கின்றன. அதற்கு தோழர்: செந்தில்வேல் அவர்கள் புலிகளை ஆதரித்த போக்குகளும் முக்கிய காரணமாகும்.  பல இடதுசாரிகள் இந்த தவறைச் செய்தமை முக்கியமாகும்
இதனால்தான் தமிழ்மக்களின் தற்போதைய இளம்தலைமுறைகள் இடதுசாரிச்சிந்தனைகளை உள்வாங்கக்கூடிய நிலையில் இல்லை. அது மேற்கத்தைய கருத்தியல்களையும் சீரழிந்த கலாச்சாரத்தையும் உள்வாங்கி பலவீனப்பட்டுப்போய் நிற்கிறது.
சரி ரி.பி.சி வானொலியில் என்ன காமெடி நிகழச்சி எனக் கேட்கிறீர்களா?. தொலைபேசி உரையாடலில் விhவதத்தில் கலந்து கொள்ளும் அரசியல் தலைவர்களை நோக்கி எழுப்பப்படும் கேள்விகளின் முன்னரே அவர் கதைக்கத்தொடங்கி விடுவதால் அவருக்கு கேள்விகள் சரியாக விளங்குவதில்லை. கேள்விகளை கேட்கத்தொடங்கினாலும் மறுமுனையில் அவர் தொடர்ந்து கதைத்துக்கொண்டிருப்பார்.
சுவிஸில் இருந்து ஜெயா என்று ஒருவர் அடிக்கடி வருவார்.  தமிழ்சினிமாக்களில் கப்பம் வசூலிக்க வருகின்ற அடியாட்கள் மாதிரித்தான் வருவார். வானொலி அறிவிப்பாளருக்கும் ஏனையோருக்கும் அவர் வணக்கம் சொல்வது கூட ஏதோ மிரட்டுவது மாதிரி இருக்கும். அவர் என்ன பேசுகிறார் என்று சொல்லி முடிவதற்குள் விஷயத்தை சொல்லிவிட்டுப் போய் விடுவார். தோழர்செந்தில்வேல் கூட பயந்து போயிருப்பார்.
லண்டனில் இருந்து வருகின்ற குமாரலிங்கம் என்கிற புலி விசுவாசிக்கு வயதாகி விட்டது. காசி ராமேஸ்வரம் என்று போய்ட்டு வந்தால் புலிப்பாவத்திலிருந்து விடுபடலாம்.
புலி விசுவாசிகளுக்கு கேள்விகள் கேட்கத் தெரியாது. ஏதோ கேட்கவேண்டும் என்பதற்காக கேட்டு விட்டுப்போவார்கள்..சிலர் தூஷணம் பேசிவிட்டுப்போவர்கள்.
போஸ்ட் ஆபிசில் போய் இறைச்சி என்ன விலை என கேட்கிற மாதிரி புலிகள் வந்து கேள்விகள் கேட்டுவிட்டுப்போக வானொலி நிர்வாகி டென்சனாகி விட இப்படியே சில காமெடிகளும் நடக்கும்.  
அது சரி காமெடி இல்லாவிட்டால் எந்த சினிமாப்படம் ரசிக்கும்படியாக இருக்கும்…….

கருத்துகள் இல்லை: