வெள்ளி, 26 நவம்பர், 2010

2011 தேர்தலில் தி.மு.க., தேர்தல் அறிக்கை தான் "ஹீரோ': ஸ்டாலின்

""தமிழகத்தில் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை தான் ஹீரோவாக இருக்கும் '' என, பொள்ளாச்சி பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் சர்க்கஸ் மைதானத்தில் நேற்று மாலை தி.மு.க., அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தி.மு.க., அரசு கட்சி பாகுபாடின்றி அனைவரையும் சமமக்களாக நினைத்து திட்டங்களை செயல்படுத்துகிறது. நேற்று பெய்த மழையில் முளைத்த கட்சிகள், மக்களை ஏமாற்றும் வகையில் வாக்குறுதிகளை அள்ளி விடுகின்றன. நான் யாரையும் அடையாளம் காட்டி பேசவில்லை. அப்படி பேசுபவர்கள் இன்று, அகதிகளாக; அனாதைகளாக அலைகின்றனர். ஆனால், முதல்வர் கருணாநிதி தேர்தல் நேரத்தில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் 100 சதவீதம் நிறைவேற்றி வருகிறார். சொல்வதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்றில்லாமல், சொல்லாததையும் செய்து வருகிறார். கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க., தேர்தல் அறிக்கை தான் ஹீரோ என்று, தற்போது உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசினார். இதே போல், வரும் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் தி.மு.க., தேர்தல் அறிக்கை தான் ஹீரோவாக இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.

தமிழகத்திலுள்ள 21 லட்சம் குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டம் இந்தாண்டு துவங்கப்பட்டுள்ளது. கிராம பகுதிகளில் செயல்படுத்தும் இந்த திட்டத்தை பேரூராட்சி பகுதிகளிலும் செயல்படுத்தி குடிசை வீடுகளே இல்லாத நிலையை ஏற்படுத்த அரசு வீடுவழங்கும் திட்டத்தை முதல்வர் விரிவுபடுத்தியுள்ளார். வீடுகட்டும் பணிகள் நிதி வசதி இல்லாமல் தடைபடவில்லை, இயற்கை ஒத்துழைக்காததால் சில மாவட்டங்களில் தடைபட்டுள்ளது. டிசம்பர் மாத இறுதிக்குள் தமிழகத்தில் மூன்று லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்படும். தி.மு.க., அரசை எந்த வகையிலும் எதிர்கொள்ள முடியாததால், ஜெயலலிதா பொய்யான பிரச்னைகளை கிளறிவிடுகிறார். இதற்கு முடிவு சொல்லும் வகையில் 2011 சட்டசபை தேர்தல் முடிவு அமையும். இவ்வாறு, துணை முதல்வர் ஸ்டாலின் பேசினார். விழாவில், அமைச்சர்கள் பழனிச்சாமி, சாமிநாதன், முன்னாள் அமைச்சர் கண்ணப்பன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
லிஸ்ட் - இலவசனர்கோட்டை,இந்தியா
2010-11-26 06:21:34 IST
எனக்கு தேவையானவை: iPhone, Laptop, 100cc bike, LCD TV. MP தேர்தல் வரைக்கும் இது போதும்....
பச்சைத்தமிழன் சுரேஷ் - பரமக்குடிமலேசியா,இந்தியா
2010-11-26 06:02:37 IST
அடுத்து என்ன என்ன ஓசில கொடுக்க போறானுங்களோ! படிச்சவங்களுக்கு நல்ல வேல வாய்ப்பு கொடுங்கப்பா. அதவுட்டுட்டு வேல இல்லாதவனுக்கு ஊக்க தொகை தாறேன், ஓசில அடுப்பு தர்றேன், ஒரு ரூபா அரிசி தர்றேன், ஏமாததிங்க.......
குமார் - Singapore,சிங்கப்பூர்
2010-11-26 05:52:35 IST
தயவு செய்து யாராவது வழி சொல்லவும். இது நம் தாய்நாட்டை இது போன்ற ஓநாய்களிடம் இருந்து காப்பாற்றுவதர்காகத்தான். அடுத்த தேர்தலில் எந்த ஒரு கட்சியும் இலவசம் என்று அறிக்கை விடாமல் இருக்க நீதிமன்றத்தில் தடை இப்போதே வாங்க வேண்டும். இலவசங்களை தவிர்த்து வேலை வாய்பு, கல்வி முன்னேற்றம், புதிய தொழிற்சாலை என்று வேண்டுமானால் அறிக்கை விட்டும். அடிமட்ட ஏழை மகளுக்கு இலவச உணவு பண்டங்களை தவிர எந்த ஒரு இலவசமும் எந்த ஒரு கட்சியும் அறிவிக்க கூடாது. இலவசங்களின் பெயரால் இந்த பண முதலைகள் பெருத்த பிறகும் ஆசை அடங்காமல் இலவசங்கள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி மென்மேலும் பணக்காரர் ஆவார்கள், நாட்டு மக்கள் உழைப்பின் அருமையை உணராமல் சோம்பேறிகள் ஆஹி விடுவார்கள். நமக்கு பிறகு அடுத்த தலைமுறை இங்கு வாழ வேண்டும். அதற்கு இலவசங்கள் வழி செய்யாது. நாட்டு மக்களே நன்று யோசித்து உழைத்து வாழ வழி கேளுங்கள். இலவச மீன் சாப்பாட்டுக்கு பதில் மீன் பிடிக்க கற்று கொள்ளுங்கள். இலவசங்கள் ஒரு ஆட்கொல்லி. இலவசங்களால் நாடு அழிவு பாதையில் செல்லும் போது இந்த முதலைகள் வேறு நாட்டுக்கு ஓடிவிடும். பொதுமக்களாகிய நாம் தான் சாகவேண்டும் குடும்பத்தோடு. நன்கு நினைவில் வைத்து கொள்ளவும், நமக்கு பிறகு அடுத்த தலை முறை இங்கு வாழ வேண்டும். இலவசங்களை வாங்காதீர்கள். நான் ஒரு சாதாரண மனிதன், தனி ஆளாக நீதிமன்றம் செல்லமுடியாது. யாராவது வழி சொலவும், இபோதே இலவச அறிக்கைகளுக்கு நீதிமண்டரத்தில் தடை உத்தரவு வாங்க வழி சொலவும்....
தமிழ்செல்வன் - சென்னை,இந்தியா
2010-11-26 05:47:58 IST
ஊழல் திலகங்களே நீங்கள் சொல்லாதை பல செய்துள்ளீர்கள் !! செப்க்ட்ரும் ஊழல்,அரசு கேபிள் ஊழல்,மணல் கொள்ளை ஊழல்,அரிசி கடத்தல் ஊழல்,சேது சமுத்திரம் ஊழல்,தேசிய நெடுஞ்சாலை ஊழல்,மேம்பால ஊழல்,வாக்களர்களுக்கு பணம் குடுத்து ஒட்டு வாங்கியது(திருமங்கலம் பார்முலா),எதிர் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை i பணம் கொடுத்து வாங்கியது,மைனாரிட்டி அரசை மெஜாரிட்டி ஆக்க நினைத்தது,மதுரையில் தினகரன் ஊழியர் மூவரை உயிர் உடன் கொன்றது,தா கிருடின்னனை வெட்டி கொன்றது, போன்ற முக்கிய சாதனை எல்லாம் மறந்து விடாதீர்கள் !! உங்களது சாதனைகளை பார்த்து பிரதமர் மற்றும் சோனியா கட்டுமான துறை எதுவும் திமுகவிற்கு இல்லை என முடிவு எடுத்து விட்டார்களே !! உங்கள் குடும்பத்தில் பல டிக்கெட்டுகள் டெல்லியிலும்,சென்னையிலும் பதவியில் இருந்து கொள்ளை அடியுங்கள். உங்கள் கொள்ளை வெளியில் தெரிந்தால் ராஜா போன்ற கூஜாக்கள் (இளிச்ச வாயர்கள்) பல உள்ளார்கள் அவர்களை மாட்டிவிடலாம் !! உங்கள் சாதனைகளால் கூட இருந்த காங்கிரஸ் பீகாரில் ஜீரோ வாங்கி விட்டது !! வரும் உங்கள் ஊழல் சாதனை தேர்தல் அறிக்கை தான் ஹீரோ !! மக்கள் தரப்போவது ஜீரோ !!! மூட்டையை கட்டி தயாரா இருங்கள் !!...
selva - sydney,ஆஸ்திரேலியா
2010-11-26 05:23:56 IST
Deputy CM Of Tamilnadu, everything is ok, where is 2G spectrum scandal money this is the hero of now....
இளமாறன் - சென்னை.,இந்தியா
2010-11-26 05:18:17 IST
இலவச மனை, இலவச கட்டிங், இலவச பிரியாணி, நூறு நாள் வேலை உத்தரவு திட்டத்தில் இலவச பணம், ஒரு ரூபா அரிசி எல்லாம் சூப்பர். நாங்கள் எங்களுக்கு கிடைத்த இலவச பணத்தில் டாஸ்க்மாக் சரக்கு அடித்துவிட்டு, ஒரு ருபாய் அரிசியில் வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு சுகமாக இருக்க உடம்பு சுகத்திற்கும் ஒரு இலவச விலைமாது கொடுத்தால் நான் சாகும் வரை என் ஒட்டு தி மு கா விற்குதான்....
ர.ஸ்ரீனிவாசன் - சென்னை,இந்தியா
2010-11-26 05:13:26 IST
முதலில் சட்டம் ஒழுங்கு பற்றி கவனம் செலுத்துங்கள் தலைவரே. கலைஞர் குடும்பத்தின் வாரிசுகளின் நண்பர்கள் என பல பேர் அராஜகம் செய்து தி மு க விற்கு உலை வைக்கின்றனர். இனியும் மக்களை குறைத்து எடை போட வேண்டாம்....
அருண் - சென்னை,இந்தியா
2010-11-26 04:23:50 IST
மக்களே, இனியும் ஏமாற வேண்டாம் !!! இவங்க அடுத்து செல் போன் இலவசம் நு சொல்ல போறாங்க !! வீட்டுக்கு ஒரு லேப்டாப் நு சொல்லுவாங்க !! போதும் !! இவர்கள் கொள்ளை அடித்தது போதும் !!! இவை அனைத்தும் மற்ற பொருட்களின் விலையை மறைமுகமாக உயர்த்தும் !! தமிழகம் விற்கப்படும் !! சட்டம் என்பது இருக்காது !! மன்னர் ஆட்சி வந்து விடும் !!!...
subramanian - Trichy,இந்தியா
2010-11-26 04:12:32 IST
திமுக தேர்தல் அறிக்கையில் மட்டும் அல்ல லஞ்சத்திலும் முதல் இடம் தான். அரசு அதிகாரிகளை கண்டிக்க தவறிய திமுக...
சந்தோஷ்.g - vellore,இந்தியா
2010-11-26 03:49:40 IST
தமிழகத்தில் 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை தான் ஜீரோவாக இருக்கும் '' என, பொள்ளாச்சி பொதுக்கூட்டத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் கூறினார். முதல்வர் கருணாநிதி தேர்தல் நேரத்தில் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் 100 சதவீதம் ஏமாற்றி வருகிறார். சொல்வதை செய்யமாட்டோம் செய்வதை சொல்லமாட்டோம் என்றில்லாமல், சொல்லாததையும் செய்து வருகிறார். ஸ்பெக்ட்ரம் ஊழலில் ஒரு லட்சத்து எழுபது ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடிப்போம் என்று சொல்லாததையும் செய்து வருகிறார், ஒரு வீடு கட்ட ஆறு மாதம் ஆகும், ஆனால் மூன்று லட்சம் வீடுகள் டிசம்பர் மாதத்திற்குள் அறையும் குறையுமாக, தரம் இல்லாமல் கட்டி முடித்து, திமுகவினருக்கே கொடுக்கும் அரசு திமுக அரசு ஒன்று தான். அடிக்கல் நாட்டு விழாவும், திறப்பு விழாவும் ஒரே நாளில் நடத்தும் கட்சி திமுக கட்சி தான். வரும் தேர்தலில் அறிக்கையில் எல்லாருக்கும் இலவசமாக மூன்று வேலை சாப்பாடு இலவசம், சாப்பிட்டு குடிக்க மது இலவசம், மாது இலவசம், நீங்கள் வேலைக்கே போகதேவை இல்லை, வீட்டிலே உட்கார்ந்து கொண்டு நாங்கள் கொடுக்கும் இலவசங்களை வைத்து காலத்தை கழிக்கலாம், அது போன்ற ஒரு தேர்தல் அறிக்கை வர போகிறது. இவ்வாறு துணை முதல்வர் பேசினார். எங்கள் தலைவர் கருணாநிதி கூறினார், யாரும் யோசிக்கவிடகூடாது, அவர்களை இலவசங்கள் கொடுத்து பிச்சை காரர்களாக வைத்து கொள்ள வேண்டும் அப்போது தான் நாம் வெற்றி பெற முடியும் என்று... அதனால் அதிக பட்ச இலவசங்களுடன் தேர்தல் அறிக்கை தயாராகி கொண்டுள்ளது, யாரும் வருத்த படாதீர்கள். கோவிலில் அன்னதானம் கொடுப்பது போல தினமும் எல்லாருக்கும் இலவசம் அளிக்க படும் அதற்காக தான் ஸ்பெக்ட்ரம் பணம் வைத்துள்ளோம்....
த.செல்வன் - திருநெல்வேலி,இந்தியா
2010-11-26 03:28:13 IST
நீங்க எதிபார்க்கிற முடிவை 2011 ல் நிச்சயமாக மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.இன்னும் இலவசம் கொடுத்து,பணத்தை கொடுத்து ஏமாற்றிவிடலாம் என கனவு காண்கிறிர்கள் பீகார் மக்களை விட தமிழக மக்கள் மோசமில்லை.தமிழக மக்களும் வைராக்கியம் உள்ளவர்கள்தான் என்பதை 2011 ல் உங்களுக்கு புரியவைப்பார்கள்.இவ்வளவு கொள்ளை,கடத்தல்,கொலை,ஊழலோ ஊழல்.தலை முதல் கால் வரை ஊழல்.எந்த திட்டமாவது உங்க குடும்பத்துக்கு உதவாத திட்டம் போட்டிருக்கிரிர்களா?எல்லா திட்டங்களிலும் ஊழல்,கமிசன்.ஆசியாவின் முதல் பணக்காரனாக உங்கள் குடும்பம் ஆனது எப்படி என்பதை தயவு செய்து தமிழக மக்களுக்கு சொல்லுங்கள் பாவம் தமிழக மக்களும் பிழைத்து போகட்டும்.சொல்ல முடியுமா?...
சாமி - பாங்காக்,தாய்லாந்து
2010-11-26 03:16:08 IST
இனிமே ஒரு கூட்டம் பஞ்சு முட்டாயில இருந்து பஞ்சு தலைகாணி வரைக்கும் எப்ப வந்து விழும்னு கையில ஒரு சட்டிய வச்சுக்கிட்டு காத்து கிட்டு இருக்கும். ஸ்டாலின் நீங்க சொன்னதுல நிறைய உண்மை இருக்குங்க. அதாவது சொல்றத மட்டும் இல்லாம சொல்லாததையும் செய்வீங்கன்னு சொன்னிங்க பாருங்க. அங்க தான் நீங்க நிக்கறிங்க. உதாரணத்துக்கு ஸ்பெக்ட்ரம், அரிசி கடத்தல், மணல் கடத்தல். ரவுடி, திருடன எல்லாம் மந்திரி , சட்ட மன்ற உறுப்பினர் ஆக்குவது. ரவுடிகளா பாத்து பொறந்த நாளைக்கு வெளியில உடறது. ஒரு வார்டு கவுன்சிலர் கூட மிக பெரிய கலவரத்தை உங்க ஆட்சியில மட்டும்தான் உண்டு பண்ண முடியும். அப்புறம் நாலஞ்சு முதல்வர்கள் ஆளுகின்ற மாநிலம் என்ற நற் பெயர் வங்கி கொடுத்தது. கஞ்சி குடிக்க வழியில்லாத நிலையில் இருந்து எந்த தொழிற்சாலையோ, தொழில்களோ இல்லாத நிலையில் அரசியல் மூலமாக மட்டுமே ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான கொடிகளை சேர்க்க முடிந்தது. கேட்டால் கதை வசனம் ezhuthi சம்பாதித்தது என்று திரும்ப ஒரு கதை viduvathu....
கதிரவன் - Namakkal,இந்தியா
2010-11-26 03:15:44 IST
ஆமாம்!! ஆமாம் !!! நீங்கள் சொல்வதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்றில்லாமல், சொல்லாததையும் செய்து தமிழகத்தின் பெருமையை உலக அளவில் கின்னஸ் புக் இல் இடம் பெற செய்து விட்டீர்கள் !!! அதனால் சத்தியமாக DMK (உங்கள் தந்தை மற்றும் உங்கள் குடும்ப மற்றும் கழக பெருச்சாளிகள்தான்) தான் ரியல் ஹீரோக்கள் !!!!! ஏன் சொல்ல மாட்டார் உள்துறை அமைச்சர் சிதம்பரம்,, யாரால் முடியும் தோற்று விற்ற MP யை ஜெயித்து விட்டதாக தேர்தல் அதிகாரியையே அறிவிக்க சொல்ல உங்கள் தந்தையை தவிர !!! சும்மா சொல்ல கூடாது சிதம்பரத்தின் நன்றி விசுவாசத்தை, தான் எப்பொழுது தமிழகம் வந்தாலும் மஞ்சள் துண்டை பார்க்காமல் தன் வீட்டிற்கே போவதில்லையாம் !! ஆனால் அந்த நன்றி விசுவாசத்தில் கொஞ்சமாவது வோட்டு போட்ட மக்களுக்கு காட்டுங்கள் உங்களுக்கு புண்ணியமா போகும் ... ... இந்த வருடம் தேர்தல் அறிக்கை மற்றும் தேர்தல் வேட்பாளர் அறிவிக்கும் முன்னர் தயவு செய்து கொஞ்சம் உங்கள் இயக்கத்தின் முன்னோடி "பேரறிஞர் அண்ணா" மற்றும் "பெருந்தலைவர் காமராஜர்" ஆகியோரின் அரசியல் கொள்கையை படித்து விட்டு செயல்படுங்கள் அப்பொழுதாவது கொஞ்சமாவது தன்னலம் மறந்து மக்களுக்கு சேவை செய்ய எண்ணம் பிறக்கும்....
வைகை Selvan - Periyakulam,இந்தியா
2010-11-26 02:51:03 IST
அட்லீஸ்ட் அடிச்ச 1.76 லட்சம் கோடி பணத்துல 50 % வச்சாலும் 88 ஆயிரம் கோடி இருக்கே. இலவசங்கள அள்ளிவிடுங்க. பாமர மக்கள் அத பாத்து ஒட்டு போட்டுருவாங்க.. பாவம் தமிழ் நாடு.. தமிழ் நாட்டு மக்கள்.....
பாஸ்கர் - நியூஜெர்சி,யூ.எஸ்.ஏ
2010-11-26 02:38:39 IST
2006 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கை தான் ஹீரோ , மற்ற கட்சிகள் வில்லன்ஸ் - 2011 ஆம் ஆண்டு நீங்க சொன்ன மாதிரி தேர்தல் அறிக்கை தான் ஹீரோ , ஆனல் வில்லன்ஸ் - மக்கள் - எப்போ சொல்லுங்க ...நீங்க ஜெய்க்க முடியுமா?...
sathish - melbourne,ஆஸ்திரியா
2010-11-26 02:22:15 IST
ஊழலின் விளக்கமே,,, ஊழலின் பிறப்பிடமே,, ஊழலின் ஊற்றே ,,,,ஊழலியே பிறந்து,,,ஊழலிலே வளர்ந்து,, ஊழலிலே ஊறி கொண்டு இருக்கும் தமிழகமே,,, வாய் பந்தல் போடுவதற்கும் ஒரு சாமர்த்தியம் கண்டிப்பாக வேண்டும்,,, ஒரு ரூபாயில் திருட்டு ரயில் தான் ஏறி வந்தேன் என்று பெருமையாக பீத்தி கொள்ளும் தந்தையின் வாரிசும் அதே போல்தான் பீத்துகிறது,, மூணு லட்சம் வீடுகள் ,,,கொஞ்சம் ஓய்வாக வீட்டிற்கு போயி உட்க்கார்ந்து யோசிச்சால் தெரியும் ,,எவ்வளவு முட்டாள் தனமாக மக்களை முட்டாள் ஆக்கி கொண்டு இருப்பது,,, {{{இந்த குடிகார ,,இலவச வெறி கொண்ட மக்கள்,,இல்லை,,இல்லை,,அறிவு கெட்ட மாக்களுக்கும் இது தான் தேவை எனபது தான் உண்மை,,,}}} தெரியும்,,புரியும்,, குடும்பஅரசினால் இந்தியாவின் தரம் உலக அரங்கில் எவ்வளவு தாழ்ந்து போயி இருப்பது உங்களை போன்ற அறிவிலிகளால் எப்படி உணர முடியும்,,, தேர்தலுக்கு முன் உங்கள் கேடு கெட்ட இலவச ஊழல் அறிவுப்புகள்தான் ஹீரோ,,,,,,, சந்தேகமே வேண்டாம்,,,,,, ஆனால் தேர்தலுக்கு பின் மக்கள் தகுந்த பாடம் உங்களுக்கு கற்பித்து உங்களின் ஊழலின் சாம்ராஜ்யத்தையே,,,, ஜீரோ ,,,,ஆக்க போகிறார்கள்,,,உங்கள் பொடி தூசி கூட காணாமல் போகிறது,,,ஆனால் ஒன்று நீங்கள் கொள்ளை அடித்த கோடி கோடி கணக்கான ஊழல் பணத்திற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்,,, பகல் இருந்தால் ,,,,அடுத்து வருவ

கருத்துகள் இல்லை: