வெள்ளி, 26 நவம்பர், 2010

கம்போடிய களியாட்ட சனநெரிசலில் பலியானவர்களின் எண்ணிக்கை 450 ஆக உயர்வு!

கம்போடியத் தலைநகர் பொனோம் பென்னில் களியாட்ட நிகழ்வொன்றில் ஏற்பட்ட சனநெரிசல் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 450 ஆக உயர்ந்துள்ளதாக பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கம்போடியாவில் ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படும் தண்ணீர் விழாவின் போது, பாலத்தில் அலங்கரிக்கப்பட்ட விளக்குகளில் மின்கசிவு ஏற்பட்டதனால் சனநெரிசல் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஒரே நேரத்தில் பாலத்தை கடக்க முட்பட்டதால் சன நெரிசல் ஏற்பட்டுள்ளது.இந்நிகழ்வில் 300க்கும் அதிகமானோர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி 100 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே பலியானவர்களின் எண்ணிக்கை 450 ஆக உயர்ந்துள்ளது.

கருத்துகள் இல்லை: