வெள்ளி, 26 நவம்பர், 2010

Mannar வழங்குநர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

மன்னார் கடற்பரப்பு எண்ணெய் அகழ்வு

வழங்குநர்களை தெரிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

மன்னார் கடற்பரப்பில் எண்ணெய்க் கிணறுகளை அகழ்வதற்குத் தேவையான பொருட்கள், சேவை வழங்குநர்களைத் தெரிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆளும் கட்சி பிரதம கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன கூறினார். முதற் கட்டத்தின்போது மன்னார் கடற்பரப்பில் மூன்று எண்ணெய்க் கிணறுகளை அகழ்வது தொடர்பில் கெயான் லங்கா கம்பனியுடன் உடன்படிக்கை செய்யப்பட்டுள்ளது. மேற்படி கம்பனிக்கு ஆய்வு செய் வதற்கு 3,000 சதுர கிலோ மீற்றர் பரப்பரளவு வழங்கப்பட்டுள்ளது. செயான் லங்கா கம்பனி ஆய்வுபூர்வ அகழ்வு நடவடிக்கைகளை 2011 அக்டோபர் 15ஆம் திகதி பூர்த்தி செய்ய வேண்டும். இதேவேளை, இலங்கையின் தெற்கு கரைகடந்த பிரதேசத்தில் வண்டல் படுக்கையில் எண்ணெய் வளம் இருப்பது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள மேலதிக தரவுகள் திரட்டப்படவுள்ளன. செய்மதித் தரவுகள் மூலம் இரு பிரதேசங்கள் அடையாளங் காணப் பட்டன. இதன்படி 740 சதுர கிலோ மீட்டர் பரப்பில் தரவுகள் திரட்டப் பட்டன.
கார்த்திகை 26, 2010

கருத்துகள் இல்லை: