புதன், 7 ஆகஸ்ட், 2024

டாக்டர் அர்ச்சுனா ராமநாதன் பிணையில் விடுதலை!


  மருத்துவர் அர்ச்சுனா அவர்கள் நீதிமன்றினால் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தீர்ப்பானது இன்று (7.8.2024) மன்னார்  நீதவான் நீதிமன்றினால் வழங்கப்பட்டுள்ளது.
மன்னார் மருத்துவமனையில்  கடந்த வெள்ளிக்கிழமை இரவு அனுமதி இன்றி  நுழைந்து கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக அவருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
கடமையில் இருந்த மருத்துவர்கள் செவிலியர்கள்  மற்றும் மருத்துவமனை  பணியாளர்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை சுமத்தி மருத்துவமனை  நிர்வாகம் அவருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர், கடந்த சனிக்கிழமை மருத்துவர்  அர்ச்சுனாவை கைது செய்தனர்.
இதனையடுத்து நீதவான் முன்னிலையில் முற்படுத்திய வேளை, மருத்துவரை எதிர்வரும் 07ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில்,திரு  அர்ச்சுனா இன்று மன்னார் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டிருந்த நிலையில், நீதிபதியால் இரண்டு சரீரப் பிணையில் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி தேசம்நெட்

கருத்துகள் இல்லை: