
ஹெல்மெட் போடவில்லை; லத்தியை வீசினர்!”- போலீஸாரால் பறிபோன பெண்ணின் உயிர்
.vikatan.com - ஜெ.முருகன் - தே.சிலம்பரசன் :
ஹெட்மெட்
அணியாமல் சென்றவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்த முயற்சி செய்தபோது
கீழே விழுந்த மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை
ஏற்படுத்தியிருக்கிறது.
விழுப்புரம்
மாவட்டம் கள்ளக்குறிச்சியை அடுத்த உலகங்காத்தான் பகுதியைச் சேர்ந்த
அய்யம்பெருமாள் என்பவரின் மகன் செந்தில். கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் சுமைதூக்கும் தொழிலாளியான இவர், நேற்று தனது இருசக்கர வாகனத்தில் தாய் அய்யம்மாளுடன் கடலூரில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார்.
அப்போது கள்ளக்குறிச்சி தீயணைப்பு நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பயிற்சி உதவி ஆய்வாளர் வேல்முருகன் தலைமையில் காவலர்கள் இளையராஜா, சந்தோஷ் மற்றும் செல்வம் ஆகியோர் செந்திலின் வாகனத்தை கைகாட்டி நிறுத்தியிருக்கின்றனர். ஹெல்மெட் போடாமல் சென்றதால் பயந்துபோன செந்தில், காவலர்களிடமிருந்து தப்பிக்க தனது வாகனத்தை வேகமாக இயக்கியிருக்கிறார்.
அப்போது
அங்கிருந்த காவலர்கள் தங்கள் கையிலிருந்த லத்தியை செந்திலை நோக்கி
வீசியிருக்கின்றனர். செந்தில் அதிலிருந்து விலகிவிட்டதால் அவரது பின்னால்
அமர்ந்திருந்த அய்யாம்மாள் மீது பட்டு அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.
அதில்
படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த
அய்யம்மாளை வாகனத் தணிக்கையில் இருந்த காவலர்களின் உதவியுடன் மீட்ட
அப்பகுதி மக்கள் அவரை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அய்யம்மாள்
ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக