vikatan.com :இரா.கோசிமின்
ஆர்.எம்.முத்துராஜ்: சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண்ணுக்கு ஹெச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக 5 பேர் கொண்ட குழுவினர் சிவகாசி அரசு மருத்துவமனை ஊழியர்களிடம் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த 8 மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு
டிசம்பர் 3-ம் தேதி ஹெச்.ஐ.வி பாதித்தவரின் ரத்தம் ஏற்றப்பட்டது. இதனால்
அந்தப் பெண்ணுக்கும் ஹெச்.ஐ.வி தொற்று ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தமிழ்நாடு
முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர்கள், சாத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் மீது 269, 338 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்ட மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநர் இரா.மனோகரன், ரத்த வங்கிப்
பொறுப்பாளர் சைலேஷ்குமார், ஆய்வக நுட்பனர் கணேஷ்பாபு, நிலைய மருத்துவ
அலுவலர் திருமுருகானந்த், செவிலியர்கள் கலாவதி, அஜிதா, பாக்யலட்சுமி,,
நம்பிக்கை மைய ஆலோசகர் முருகேசன் ஆகியோர் இந்த விசாரணைக்கு உட்படுத்தப்பட
உள்ளனர். இந்தக் குழு இன்று (டிசம்பர் 28) காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி
வரை விசாரணை நடத்தியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக