பல்வேறு கட்சிகளையும் சேர்ந்த தொண்டர்கள் ஐ பி எல் போட்டி நடக்கும் சேப்பாக்கம் மைதானம் முன்பாக குவிந்து கோஷங்களை எழுப்பிய வண்ணம் மைதானத்தை பூட்டு போட்டு மூடும் முயற்சியில் ,,, போலீசார் கூட்டம் கட்டுக்கு அடங்காமல் செல்வதை பார்த்து திகைத்து கூடுமானவரை அவர்களை கைது செய்து வாகனங்களில் ஏற்றி கொண்டிருக்கின்றனர் .tamiloneindia :நெல்லையில் ரெய்னா பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து!- தாக்குதல் நடந்தால் நாங்கள் பொறுப்பு அல்ல- வேல்முருகன்- வீடியோ சென்னை: சென்னையில் ஐபிஎல் போட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன்களை பறக்கவிட்டு வேல்முருகன் போராட்டம் நடத்தினார்.
காவிரி
மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் ஆங்காங்கே போராட்டங்கள்
நடத்தப்படுகின்றன. இந்நிலையில் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நாளை
நடத்தப்படுகின்றன.இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். போட்டிகளை பார்க்க சென்னையில் யாரும் போகாமல் இருந்து மைதானமே காலியாக இருப்பதன் மூலம் நம் பிரச்சினைகளை டிவியில் பார்க்கும் உலக நாடுகளுக்கு உணர்த்துவோம் என்று அரசியல் கட்சிகளும், தன்னார்வலர்களும் கூறி வந்தனர். இடம் ஐபிஎல் போட்டிகளை கிரிக்கெட் வாரியம் இடம் மாற்ற செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்தன. ஆனால் திட்டமிட்டபடி நாளை சென்னையில் போட்டிகள் நடைபெறும் என்று தமிழக கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக