ஞாயிறு, 10 ஏப்ரல், 2016

தேமுதிக உடைவதற்கு வைகோதான் காரணம்: ஸ்டாலின் ஆவேசம்

ஸ்டாலின். | படம்: ம.பிரபு.
சென்னையில் 3-வது நாளாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக பொருளாளர் ஸ்டாலின், செய்தியாளர்களைச் சந்தித்த போது, தேமுதிக உடைவதற்கு வைகோதான் காரணம் என்றார். அதாவது தேமுதிக-வைத் தொடர்ந்து த.மா.கா-விலிருந்தும் நிர்வாகிகள் வெளியேறுவதற்குக் காரணம் என்ன என்று கேட்கப்பட்டது. இது குறித்து ஸ்டாலின் பதிலளித்த போது, "அதை அங்கு போய்தான் கேட்க வேண்டும். ஏற்கனவே தேமுதிக அங்கு சென்று இணைந்ததும் உடைய ஆரம்பித்தது, இப்போது தமாகா இணைந்ததும் அந்தகட்சியும் உடைய ஆரம்பித்துள்ளது. ஆனால் இதெல்லாம் அவர் கண்ணுக்குத் தெரியவில்லை. ஆனால் அந்த வைகோ ஏதோ கலைஞரும், ஸ்டாலினும் திட்டமிட்டு, ஏதோ பல கோடி ரூபாய் கொடுத்து அந்த கட்சியை உடைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்லி கொண்டு இருக்கிறார்.


ஆக, தமா.கா.வாக இருந்தாலும், தேமுதிகவாக இருந்தாலும் அவற்றை உடைப்பதற்கு யார் காரணம் என்று கேட்டால், என்னை பொறுத்தவரையில் நான் வெளிப்படையாக சொல்கிறேன், வைகோதான் காரணம். இந்த கட்சிகளை எல்லாம் அங்கு கொண்டு சென்று சேர்க்காமல் இருந்தால், அவை உடைந்திருக்காது. எனவே அவர்தான் அவற்றை உடைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார் என்பது என்னுடைய குற்றச்சாட்டு.
என்று கூறினார்.  //tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை: