ஞாயிறு, 17 ஏப்ரல், 2016

எடியுரப்பா: ஜெயலலிதா மீண்டும் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆவார்! -

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்ட மன்ற தேர்தலில், ஜெயலலிதா வெற்றி பெற்று மீண்டும் முதல்வராவார் என்று முன்னாள் கர்நாடகா முதல்வர் எடியூரப்பா கருத்து தெரிவித்துள்ளார்.<>சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசிய போது “கடந்த பாராளுமன்ற தேர்தலில் நரேந்திர மோடி அலை வீசியபோதும், தமிழகத்தில் பாஜகவால் பெரிதக வெற்றி பெற முடியவில்லை. அதற்கு காரணம் ஜெயலலிதாவின் செல்வாக்குதான்.நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா நிச்சயம் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பார். ஏனெனில் அவர், பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியுள்ளார்.இருந்தாலும், தமிழகத்தில் ஒரு கனிசமான வாக்குகளை பெற பாஜக முயலும். ஒரு தொகுதியிலாவது பாஜக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது” என்று அவர் கூறினார்.வெப்துனியா.com  இந்த ஆளை கூட்டியாந்து அதிமுகவுக்கு ஆதரவா பிரச்சாரம் செய்ய வைங்க...அதிமுகவுக்கு டெப்பாசிட்டே போய் விடும்

கருத்துகள் இல்லை: