ஆனால் மதியம், 2:00 மணிக்கு கோகுல இந்திரா தவிர, மற்ற அமைச்சர்கள் அனைவரும் அங்குவந்தனர். பின், நிகழ்ச்சி துவங்கியது. அமைச்சர் வளர்மதியை, பச்சை குத்திக் கொள்ள தொண்டர்கள் அழைத்தனர். 'நான் ஏற்கனவே குத்தியிருக்கிறேன்' என சொல்லி, அவர் கையை காட்ட, அவரை விட்டுவிட்டனர். உடனே, அமைச்சர் பழனியப்பனும், தன் கையை காண்பித்து ஒதுங்கினார்.
இப்படி அமைச்சர்கள் அனைவரும் ஒதுங்கிக் கொள்ள, தொண்டர்களுக்கு முதல்வர் உருவம் பச்சைகுத்தப்பட்டது. ஏற்பாடு செய்யப்பட்ட, 668 பேர் வரிசையாக பச்சை குத்திக் கொண்டனர்.
ஒருவருக்கு ரூ.300
* வேலுார் மாவட்டம், அகரம்சேரி பகுதியைச் சேர்ந்த, 38 நரிக்குறவர்கள், பச்சை குத்தும் பணிக்காக வந்திருந்தனர். ஒரு பச்சை குத்த, 300
* பச்சை குத்தும்போது, உடலில் ஒவ்வாமை ஏற்பட்டால், சிகிச்சை அளிக்க, மருத்துவக் குழு தயார் நிலையில் இருந்தது
* பச்சை குத்திக் கொண்டவர்களுக்கு, சேலை, வேட்டி, பனியன், காலை டிபன், மதியம் சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. dina
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக