''மனோரமாகூட பல படங்கள் நடிச்சிருக்கீங்க... அவங்க இழப்பு பற்றி?'
''ஆச்சியம்மா, நகைச்சுவையின் பிம்பம். என்னா மாதிரியான நடிகை... ஆயிரக்கணக்குல படம் நடிச்சவுக. 'அவுக சாதனையெல்லாம் யாரும் செய்ய முடியுமா?’னு யோசிக்கக்கூட முடியாது. அவ்வளவு பெரிய நடிகையா இருந்தாலும் ஏதாவது விஷயம் சொன்னா, நல்லா இருந்தா உடனே ஏத்துப்பாங்க. 'இவன் என்ன சொல்றது... நாம என்ன கேக்குறது?’னு நினைக்க மாட்டாக. அந்த மனப்பக்குவம் மிகப் பெரிய கலைஞர்களுக்குத்தானே வரும். இல்லைனா, அந்த இடத்தையெல்லாம் பிடிக்க முடியுமாண்ணே?
''உங்க காமெடி பன்ச்சுகள்தான் இன்னைக்கு படத்தலைப்புகளா வருதே... அதைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?''
'' 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, 'நானும் ரௌடிதான்’, 'த்ரிஷா இல்லனா நயன்தாரா’, 'ஜில் ஜங் ஜக்’னு அது ரொம்ப லெங்த்தாப் போகுது தலைவா. இது, என் காமெடியை உலகமே ரசிச்சதால கிடைச்ச வெற்றி. மக்கள் எந்த அளவுக்கு என்னை ரசிச்சிருந்தா, இந்த டயலாக்கை எல்லாம் படத்தோட தலைப்பா வெச்சிருப்பாங்க? நான் பப்ளிக் பீஸ் தலைவா. என் தாய்க்கும் என் குலதெய்வம் அய்யனாருக்கும் இந்த நேரத்துல நன்றி சொல்லிக்கிறேன். இப்பக்கூட, 'கெணத்தக் காணோம்’, 'சண்டைனா சட்டை கிழியத்தான செய்யும்’, 'கௌம்பிட்டாய்ங்கய்யா... கௌம்பிட்டாய்ங்க...’னு பன்ச்சுகளைத் தலைப்பா பதிஞ்சிருக்காங்களாம். 'நம்ம படத்துக்கு, நாம பேசின டயலாக்கையே தலைப்பா வெச்சிடலாமா?’னு தோணுதுண்ணே. ஆனா நாம பேசுறதை இன்னொரு ஆள் வெச்சாத்தானே நல்லா இருக்கும். சரிதானே நான் சொல்றது!''
''அட... நான் பேசின பூரா வார்த்தைகளையும் தலைப்பா பதிவுபண்ணி வெச்சிக்கிட்டு சேல்ஸ் பண்றாங்கண்ணே. அதை ஒரு வியாபாரமா மாத்திட்டாங்க. முக்கியமான பொறுப்புல இருக்கிறவய்ங்களே பண்றாங்கனு சொல்றாங்க. அதுதான்ணே வருத்தமா இருக்கு. நம்மாளுங்க பலரே என் டயலாக்கைக் காசு கொடுத்து வாங்கிட்டு வந்திருக்காக. சிலர், 'இப்புடி வெச்சிருக்கேன் தலைவா’னு தகவல் சொல்வாங்க. இதுல ரெண்டு விஷயம், கொஞ்சம் முன்னபின்ன கேப் விட்டு நடிச்சாலும்கூட நாம பேசின பூரா டயலாக்கும் டைட்டிலா ரீச்சாகியிருக்கு. காரணம், நம்ம ஆக்ட்டிங் பூராவும் டி.வி-யில போய்க்கிட்டே இருக்கு. நம்ம டயலாக்குகளை இன்டர்நெட், கரன்ட் கட்டுனு எல்லா சமயமும் பயன்படுத்துறாங்க. அது ஒருவிதத்துல நல்ல விஷயம்தானே.''
'' 'டி.வி-யில பரபரப்பா இருக்கீங்க. ஆனா, திரும்ப சினிமாவுல ஏன் பரபரப்பா இல்லை?’னு யாராவது உங்ககிட்ட கேட்டாங்களா?''
''ம்ம்... நிறைய. கமல் சார்கூட ஒருமுறை பேசினாரே. 'நடிங்க வடிவேலு. நமக்கு சினிமாதான் நல்லா இருக்கும். மத்ததெல்லாம் நமக்கு எதுக்கு? விடுங்க, அதையெல்லாம் விடுங்க. நான் அதுக்குள்ள போக விரும்பலை. நீங்க இதுக்குள்ளதான் இருக்கணும். இந்த உலகம், அருமையான உலகம். எதுக்கு மத்ததெல்லாம்?’னு நல்லது சொன்னார். பெரிய விஷயம்ணே. அவர்லாம் நமக்குச் சொல்றாருன்னா சாதாரணமா! சிவாஜிக்கு அப்புறம் இன்னைக்கு அவர்தானண்ணே!
ஏற்கெனவே
நான் சொன்ன மாதிரி ஒவ்வொரு குடும்பத்தோட ரேஷன் கார்டுலதான் நான் இல்லையே
தவிர, அவுங்கள்ல ஒருத்தனா என்னை வெச்சிருக்காங்க. ஆண்டவன் புண்ணியத்துல
நம்ம மாஸ் அப்படியேதாண்ணே இருக்கு. என் ஸீட்டு காலியாத்தான் கிடக்கு. நான்
அப்பப்ப உட்கார்ந்து எந்திரிச்சுட்டு இருக்கேன் அவ்வளவுதான். என் ஸீட்டை
யாரும் தூக்கிட்டுப் போகலை. இதை நான் திமிரா சொல்லலைண்ணே... மக்கமாரோட மனசை
உணர்ந்து சொல்றேன். நான், தூசு கிடையாதுண்ணே... ஜனங்கள் மத்தியில இன்னமும்
மாஸ் பீஸு!''
''இனி அதுக்கு அவசியம் இருக்காதுண்ணே. மக்களைச் சிரிக்கவைக்க என்ன வழியோ, அந்த ஏரியாவுக்குள்ள போறதுதான் நல்லதுனு நினைக்கிறேன். நம்ம நலம் விரும்பிகளும் அதைத்தான் சொல்றாக. ஆனாண்ணே, ஓட்டுப்போடுற ஒவ்வொரு மனுஷனும் அரசியல்வாதிதானே? அரசியல்தான் உலகத்தையே நிர்ணயிக்குது. அதனால 'அரசியல் உங்களுக்கு எதுக்கு?’னு கேக்குறதே தப்பு. ஆனா, மக்கள் என்னை 'வேணாம்பா உனக்கு அரசியல். உனக்கு வேலை என்ன... நீ எங்களை சிரிக்கவை. நீ பாட்டுக்கு எங்கனயாவது போயிடுற. நாங்க இங்க ஆள் கிடைக்காமத் தவிக்கிறோம். நீ எதுக்குத் திரும்ப அங்க போற? அதுக்குல்லாம் ஆள் இருக்கு விடுய்யா’ங்கிறாங்க. ஒருத்தர் ரெண்டு பேருக்குப் பதில் சொல்லலாம்... ஒட்டுமொத்த மக்களுக்கும் பதில் சொல்ல முடியுமா? 'சரி ரைட்டு விடு... இனி நடிப்பு மட்டும்தான்’னு முடிவெடுத்துட்டேன்.''
''உங்களுக்கும் விஜயகாந்துக்குமான மனக்கசப்பு நீங்கிடுச்சா?''
''அதைப் பற்றி நான் கவலைப்படுறதும் இல்லை; சிந்திக்கிறதும் கிடையாது. இனி அந்த அரசியல் நமக்கு வேணாம். ஆனாண்ணே, எந்த அரசாங்கம் வேணும்... எந்த கவர்மென்ட் வேணாம்னு ஓட்டுப்போட்டு நிர்ணயிக்கிற நம்ம கடமையை நாம பண்ணித்தானே ஆகணும். அதைத் தவிர, இப்போதைக்கு 'அரசியல்’ங்கிற ஏரியாவுக்குள்ள இருக்கிற கடையைப் பொத்துனாப்ல மூடிவெச்சிருக்கேன். அதுபாட்டுக்கு ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போதைக்கு நடிப்போம். அவ்வளவுதான். 'தீபாவளிக்கு உங்க படம் என்ன?’னு பலர் கேட்டாங்க. தீபாவளிக்கு முன்னாடி வந்த வெற்றிப் படம், நடிகர் சங்கத் தேர்தல்; தீபாவளிக்குப் பின்னாடி வர்ற படம்தான் நம்ம ஆனந்த விகடன் பேட்டி. தட்டித் தூக்குங்க தலைவா! vikatan.com மந்திரி தந்திரி! - 30
கேபினெட் கேமராவிகடன் டீம், ஓவியங்கள்: ஹாசிப்கான், கார்த்திகேயன் மேடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக