இந்நிலையில் நாட்டில் முதன்முறையாக திரிபுராவின் சட்டப்பேரவையில் மரண
தண்டனையை ஒழிக்கவும், அதற்கு பதிலாக கொடுங்குற்றங்களுக்கு குற்றவாளிகள்
சாகும் வரை தங்களது வாழ்நாளை சிறையில் அனுபவிக்கும்படி தண்டனையை மாற்ற
வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி அனைத்துக் கட்சிகளும் இணைந்து
ஏகமனதாக தீர்மானம் இயற்றி அதை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளது.
சட்டமன்றத்தில் இந்த தீர்மானத்தை ஆதரித்துப் பேசிய திரிபுரா முதல்வர்
மாணிக் சர்க்கார், மரண தண்டனை என்பது மற்றவரின் உயிர் வாழும் உரிமையை
ஒருவர் பறித்து விட்டார் என்பதற்காக விதிக்கப்படும் தண்டனையாகும். இது
பழிவாங்கும் உணர்வோடு அளிக்கப்படுவது என்பதால் நான் இதை ஆதரிக்க முடியாது.
குற்றவாளிக்கு வாழ்நாள் முழுவதும் சிறைத்தண்டனை அளிப்பதே சரியான
தண்டனையாகும்” என்று கூறினார்.taml.வெப்துனி.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக