திங்கள், 10 அக்டோபர், 2011

சன் டி.வி., பங்குகள் கடும் வீழ்ச்சி!


சென்னை: முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறனின் சென்னை, டெல்லி, ஹைதராபாத் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசியாவின் மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு வலுக்கட்டாயமாக விற்க வைத்த விவகாரத்தில் தயாநிதி மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் மீது சிபிஐ எப்ஐஆர் (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்துள்ளது.

சி.பி.ஐ., அதிகாரிகளின் சோதனை காரணமாக, மும்பை பங்குச்சந்தையில் சன் டி.வி.,யின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தன.
இன்றைய வர்த்தக நேர துவக்கத்தில் அந்நிறுவனத்தின் பங்குகள் 7 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டன

கருத்துகள் இல்லை: