ஞாயிறு, 31 ஜூலை, 2011

சாய்பாபா மறையவில்லை; ஆசிரமத்தில் அவரது ஆத்மா


சாய்பாபா மறையவில்லை; ஆசிரமத்தில் அவரது ஆத்மாஉலவுகிறது : நடிகை அஞ்சலிதேவி ;நடிகை அஞ்சலிதேவி சாய்பாபாவின் தீவிர பக்தை. 48 வருடமாக புட்டபர்த்தியில் உள்ள சாய்பாபா ஆசிரமத்துக்கு சென்று வருகிறார். நேற்று புட்டபர்த்தி வந்த அஞ்சலிதேவி சாய்பாபா சமாதியில் வழிபட்டார்.

அவர் செய்தியாளர்களிடம்,‘’புட்டபர்த்தி வந்தால் மனதில் உள்ள வேதனைகள் எல்லாம் உடனடியாக விலகி விடும். மனதில் சாந்தி ஏற்படும். நான் ஒரு இந்தி படம் எடுத்தேன். அதில் எனக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. மன அமைதி இல்லாமல் இருந்தேன்.

அப்போது நடிகர் நாகையாதான் என்னை புட்டபர்த்தி அழைத்து வந்தார். சாய்பாபாவிடம் ஆசி பெற்றேன். அதன்பிறகு எனது வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டது. நல்ல காரியங்கள் பல நடந்தன. எனது கஷ்டங்கள் மறைந்தது.

அதனால்தான் கோடிக்கணக்கான மக்கள் அவரது பக்தையாக உள்ளனர். தமிழ்நாட்டில் கல்வி கண் திறந்தவர் காமராஜர் என்பார்கள். அதுபோல ஆந்திராவில் பாபா பலருக்கு கல்வி வழங்கி வருகிறார். வெளிநாட்டிலும் அவர் தனது கல்வி சேவையை நடத்தி வருகிறார்.

மேலும் குடிநீர் தேவை, மருத்துவ சேவையையும் செய்துள்ளார். பாபாவிடம் வழங்கும் பணம் நல்ல காரியத்துக்கு செல்வதை பக்தர்கள் உணர்ந்து உள்ளனர். அதனால் அவர் கேட்காமலேயே தொழில் அதிபர் ரத்தன்டாடா முதல் இளைஞர் தெண்டுல்கர் வரை விளம்பரம் இல்லாமல் பாபா அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கி வருகிறார்கள்.
சாய்பாபா மறையவில்லை. அவரது ஆத்மா இங்குதான் உலவுகிறது. சமாதியில் அவர் ஆழ்ந்த உறக்கத்தில் உள்ளார். இந்த நேரம் அறக்கட்டளையினரை நான் கேட்டுக் கொள்வது “பாபா செய்த சேவையை தொடர்ந்து நடத்த வேண்டும்’’ என்று கூறினார்.

கருத்துகள் இல்லை: