Veerakumar - /tamil.oneindia.com :
டெல்லி: 10 பொதுத்துறை வங்கிகளை நான்கு வங்கிகளாக இணைக்க மத்திய அமைச்சரவை இன்று, ஒப்புதல் அளித்தது.
பிரதமர் மோடி தலைமையில், இன்று, நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு நிருபர்களிடம் பேசிய, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், "இணைப்பு திட்டத்தை வங்கிகள் சமர்ப்பித்துள்ளன, அவற்றுக்கு இன்று அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது" என்றார்
வங்கிகள் இணைப்பு இதையடுத்துதான், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், 10 பொதுத்துறை வங்கிகளை இணைக்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்தது. இப்போது இதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியுடன், ஓரியண்டல் பாங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா ஆகிய 2 வங்கிகள் இணைக்கப்பட்டுள்ளன.
கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கி இணைக்கப்படுகிறது. யூனியன் பாங்க் ஆப் இந்தியாவுடன் ஆந்திரா வங்கியும், கார்ப்பரேஷன் வங்கியும் இணைக்கப்படுகின்றன. இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைக்கப்படுகிறது. எனவே 10 வங்கிகளாக இருந்த இவை, இனிமேல், நான்கு வங்கிகளாக மட்டுமே செயல்படும். இதனால், பணியாளர்களுக்கோ, அல்லது, வாடிக்கையாளர்களோ எந்த வித பிரச்சினையும் ஏற்படாது என்று, அரசு ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக