tamil.oneindia.com - hemavandhana.;சென்னை: சின்மயி - வைரமுத்து விவகாரத்தை இரண்டு விதமாக பார்க்க வேண்டியுள்ளது. முதலில் சின்மயி தரப்பில் எடுத்து கொள்ளலாம்.தன்னையும் தன் தாயாரையும் வைரமுத்து ஒரு ஓட்டலில் சந்திக்க சொன்னதாக சின்மயி சொல்கிறார். சந்திக்க தானே வைரமுத்து சொன்னார். இதில் எங்கே பாலியல் தொந்தரவு வந்தது? சின்மயியை தமிழ்த்தாய் வாழ்த்து பாடத்தான் வைரமுத்து சொன்னார். அதற்கு சின்மயி மறுத்துவிட்டாராம். அவ்வளவுதானே?
இங்கே எங்கே பாலியல் தொந்தரவு நடந்தது?
இன்றைய காலகட்டங்களில் நேரிடையாக பாலியல் தொல்லைகளுக்கு ஆளான பெண்கள் போலீசிலும், கோர்ட்டிலும் நீதி தேடி அலையும் நிலையில், வைரமுத்துவால் பாதிக்கப்பட்ட அந்த பெண் ஏன் வெளிவந்து பகிரங்க புகார் அளிக்கவில்லை?ஒரு சினிமா பிரமுகர், அதிலும் பிரபலமானவர் பாலியல் தொல்லை கொடுத்தால் எந்த பாதிக்கப்பட்ட பெண்ணாவது சும்மா விடுவார்களா சந்தி சிரிக்க வைக்க கிளம்பி விட மாட்டார்களா? இதை அப்பட்டமாக நிரூபித்து.. வழக்கு தொடுத்து... கோர்ட்டில் ஆதாரத்தை காட்டி இருக்கலாமே? அதைவிட்டுவிட்டு இப்படி பொத்தாம் பொதுவாக, சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவது சரியான செயலா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.
காலில் விழுந்து ஆசி
நற்பெயரை குலைப்பதா?
ஒரு பெண் இப்படி சொல்வாரா?
நடிகர் சித்தார்த் ஆதரவு
ஆனால் இரு தரப்பிலும் யார் மீது தவறு என்று நமக்கு இன்னமும் பிடிபடவில்லை. திமுக என்ற பலம் பொருந்திய அஸ்திவாரத்தின் ஆதரவில் அன்றைய வைரமுத்துவின் சீண்டல்கள் தற்போது வெளிச்சத்துக்கு வந்து கொண்டிருக்கிறதா அல்லது ஆண்டாள் விவகாரத்தில் இந்துத்துவா தலைகளின் கோபம் இன்னமும் தீராமல் அதை சின்மயி மூலமாக தங்களது ஆதங்கத்தை தீர்த்து கொள்ள முனையும் செயல்பாடுகள்தானா என்றும் தெரியவில்லை.
மொத்தத்தில் ஏதோ ஒன்று வெளியே வந்துள்ளது. அது பூனைக் குட்டியா அல்லது புஸ்வாணப் பெட்டியா என்பது மட்டுமே தெளிவாக வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக