33 கோயில்களில் நடைபெற்ற
களவுகளில் காணாமல் போன 385 சிலைகள் குறித்த வழக்குகள் கண்டுபிடிக்க
இயலவில்லை என்று காவல்துறையால் முடிக்கப்பட்டுள்ளன.
உயர்நீதிமன்ற உத்தரவுபடி சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் இந்தச்
சிலைகளைக் கண்டுபிடிக்க எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
காஞ்சிபுரம் சிலை மோசடி வழக்கில் இந்து சமய அறநிலையத்துறையின் கூடுதல் ஆணையர் கவிதா கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அறநிலையத்துறையின் அனைத்துச் சங்க கூட்டமைப்பின் சார்பாக பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மதியம் நடந்தது.
"இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு குற்றவாளிகளைக் காப்பாற்ற நடத்தப்படவில்லை. 'குற்றம் செய்தால் தூக்கில் கூட போடுங்கள்' ஆனால் முறையான விசாரணை நடத்தப்படவேண்டும்" என்ற கோரிக்கையோடு அறநிலையத்துறையின் அனைத்துச் சங்கங்களின் கூட்டமைப்பினர் பேசத் தொடங்கினர். ''கூடுதல் ஆணையர் கவிதா மீது எந்தவித விசாரணையும் மேற்கொள்ளாமல், முகாந்தரமின்றியும் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு, அவரைப் பற்றியும் அறநிலையத்துறை பற்றியும் உண்மைக்கு மாறான தகவல்களை ஊடகங்களில் வேண்டுமென்றே பரப்பப்பட்டு வருகிறது. பொதுமக்களிடையே இத்துறை அலுவலர்கள் மீது சிலைக் கடத்தலுக்கு உடந்தை என ஒரு தவறான மாய பிம்பம் ஏற்படுத்தப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக