மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட மேலும் மூவர் சிகிச்சை பலனின்றி உயிரழந்தனர , மாலைமலர் :தேனி மாவட்டம் குரங்கணியில் ஏற்பட்ட காட்டுத்தீ விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில், சுற்றுலா வழிகாட்டி ராஜேஸ் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி:தேனி
மாவட்டம் குரங்கணியில் நேற்று ஏற்பட்ட காட்டுத்தீயில் மலையேற்ற
பயிற்சிக்கு சென்ற 36 பேர் சிக்கிக்கொண்டனர். தீயின் தாக்கத்தால் 9 பேர்
உயிரிழந்துள்ளனர். 27 பேர் பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.<
பலியான 9
பேரின் சடலங்கள் விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த மலையேற்ற பயிற்சி நிறுவனம் இந்த பயணத்தை ஏற்பாடு
செய்துள்ளதாக கூறப்படுகிறது. முறையான அனுமதி பெறாமல் காட்டுக்குள் அவர்கள்
சென்றுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக