ஆனால், இது காலப்போக்கில் இஸ்லாமிய பெண்களின் திருமணப் பாதுகாப்பிற்கு எதிரானதாக மாறியது. தொலைபேசி வாயிலாக ஒரே தவணையில் தலாக், தலாக், தலாக் எனக் கூறி விவாகரத்து செய்வது வரைக்கும் இது பயன்படுத்தப்பட்டது. எனவே, இந்த முறையை மாற்றக் கோரி இஸ்லாமிய பெண்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை அடுத்து, அது சட்டமாக இயற்றப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. அதன்படி, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடந்துகொண்டிருக்கும் நிலையில், இன்றைய கூட்டத்தில் முத்தலாக்கை தடை செய்யும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இதனை, மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தாக்கல் செய்தார். இதையடுத்து இன்று மாலை முத்தலாக் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன்படி, இஸ்லாமிய பெண்களின் திருமண பாதுகாப்புச் சட்டம், 2017 என்ற இந்த சட்டம், முத்தலாக்கை தடைசெய்யும் விதமாக இருக்கும். இதன்மூலம், தவறு செய்பவர் மூன்று வருடங்களுக்கு பிணையில் வரமுடியாத வகையில் கைது செய்யப்படுவார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக