நான் குழந்தையாக இருந்தபோது ஒரு குடும்பத்தினருக்கு தத்து கொடுக்கப்பட்டேன். வளர்ந்த பின்னர் என்னுடைய பெற்றோர் குறித்து கேட்டபோது, எனது தந்தை இந்திரா காந்தியின் மகன் சஞ்சய் காந்தி என்று கூறப்பட்டது.
எனது அடையாளம் நிரூபிக்கப்பட வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கம். எனக்கு சொத்து, குடும்ப வாரிசுரிமை போன்ற இதர பலன்களில் எந்த ஆர்வமும் இல்லை.
நான் ஏற்கனவே ‘சிசு பவன்’ மற்றும் ‘நிர்மல் சஹ்யா’ ஆகிய அமைப்புகள் மீது, விதிகளை மீறி எனது பெற்றோரை மறைத்து தத்து கொடுக்கப்பட்டதாக போலீசில் புகார் கூறியுள்ளேன்.
‘இந்து சர்க்கார்’ திரைப்படத்தில் எனது தந்தை சஞ்சய் காந்தியின் வாழ்க்கையை தவறாக சித்தரித்துள்ளனர். எனது தந்தை அந்த திரைப்படத்தில் கூறப்படுவதுபோன்ற நபர் அல்ல. இதன் காரணமாகவே நான் இதுவரை காத்துவந்த அமைதியை உடைத்திருக்கிறேன். எனது தந்தை சஞ்சய் காந்தி என்பதை நிரூபிக்க டி.என்.ஏ. பரிசோதனைக்கும் நான் தயார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது உடன் இருந்த 72 வயதான சுஷில் கோஸ்வாமி மகராஜ் என்பவர் தன்னை சஞ்சய் காந்தியின் நெருங்கிய நண்பர் என்று அறிமுகம் செய்துகொண்டார்.
சஞ்சய் காந்திக்கும், மேனகா காந்திக்கும் திருமணம் நடைபெறும் முன்பே சஞ்சய் காந்திக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது எனக்கு தெரியும். அவர் பிரியா சிங் பால் தான் என்றும் கோஸ்வாமி கூறினார்.
பிரியா சிங், ஏற்கனவே ‘இந்து சர்க்கார்’ படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், சினிமா தணிக்கை வாரிய தலைவர், தகவல் ஒலிபரப்பு மந்திரி வெங்கையா நாயுடு ஆகியோருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், இந்த திரைப்படத்தில் தனது தந்தை சஞ்சய் காந்தி, பாட்டி இந்திரா காந்தி ஆகியோரின் வாழ்க்கை சரியான முறையிலும், போதுமான வரலாற்று தகவல்கள் இல்லாமலும் காட்டப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அவரது பேட்டி டெல்லி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக