ஞாயிறு, 11 ஜூன், 2017

பதஞ்சலியும் பிளாஸ்டிக் அரிசியும் .. முதலில் மாகி அம்பேல் பதஞ்சலி நூடில்ஸ் இப்போ பதஞ்சலி அரிசி ..

Don Ashok: மிகப்பெரிய ஆராய்ச்சிகள், தகவல்கள், புள்ளி விவரங்கள் எல்லாம் வேணாம். ரொம்ப எளிமையா ஒன்னு கேக்குறேன் யோசிச்சு பாருங்க. மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து பதஞ்சலி நிறுவனத்தை தவிர வேறு ஏதாச்சும் இந்தியாவில் முன்னேறியிருக்கிறதா? பெட்ரோல் விலை குறைந்திருக்கிறதா? GDP அதிகரித்திருக்கிறதா? பண மதிப்பு உயர்ந்துள்ளதா? வேலைவாய்ப்புகள், தொழில்கள் அதிகரித்துள்ளதா? எதுவுமே இல்லை. இன்னும் சொல்லப்போனால் இந்தியாவின் அனைத்து துறைகளும் அதலபாதாளத்தில் விழுந்திருக்கிறது.
மக்களாட்சி துவங்கிய காலகட்டத்தில் இருந்தே மோடி ஆட்சியைப் போன்றதொரு கயமைத்தனம் நிறைந்த, மக்கள் விரோத சர்வாதிகார அரசு உலகில் வேறெங்கிலும் இருந்ததில்லை. இப்படி நாடும், நாட்டு மக்களும் கண்முன்னே அழிவதைக் கண்டும் கூட உங்கள் குடும்பத்திலோ, அலுவலகத்திலோ, நண்பர்களிலோ யாரேணும் மோடிக்கு ஆதரவாக கூஜா தூக்கிக் கொண்டிருந்தால் கொஞ்சம் கூட யோசிக்காமல் அவர்கள் உறவை துண்டியுங்கள். ஏனெனில் அவர்கள் முட்டாள்கள் இல்லை, அயோக்கியர்கள்.

கருத்துகள் இல்லை: