ஞாயிறு, 23 ஏப்ரல், 2017

வைக்கோலுக்குள் வைரம்!... காளான் வளர்ப்பீர் கல்லா கட்டுவீர் !

 வைக்கோலுக்குள் காளான் வைரம்!
காளான் என்றாலே முகம் சுழித்து ஒதுங்குவோர் மத்தியில் காளான் என்பது சத்துள்ள உணவு மட்டுமல்ல... வருவாய் மிகுந்த தொழிலும் கூட என்ற விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறார்கள்,, டாக்டர் அகிலன் ராமநாதன் தலைமையிலான, பிரிட்டிஷ் அக்ரோ புராடெக்ட்ஸ் நிறுவனத்தினர்.
காளான் வளர்ப்பு பற்றி இந்நிறுவனத்தார் உண்டாக்கி வரும் ஆக்கபூர்வமான எழுச்சியால் தமிழகத்தில் பல்வேறு தளங்களில் காளான் பற்றி அறிவதற்கான ஆர்வமும், அதுபற்றிய விவாதங்களும் நடந்து வருகின்றன. இதில் இருந்தே பிரிட்டிஷ் அக்ரோ புராடெக்ட்ஸ் நிறுவனம் வெற்றிகரமான திசைநோக்கி பயணிப்பது உறுதிப்படுகிறது.
காளான் வளர்ப்புக்கும் உற்பத்திக்கும் பெரிய அளவு பிரத்யேக ஏற்பாடுகள் வேண்டாம், நம்மிடம் ஏற்கனவே இருக்கும் தகவமைப்புகளை வைத்தே காளான் உற்பத்தியும் வளர்ப்பும் எளிதில் செய்யலாம். ஆனாலும் பிரிட்டிஷ் அக்ரோ புராடெக்ட்ஸ் நிறுவனம் காளான் வளர்ப்பில் அபாரமான பொறிமுறைகளைப் பின்பற்றி நிறுவனமயமாக சர்வதேச தரத்தில் காளான் உற்பத்தி செய்கிறது.

அவர்கள் சொல்வதைக் கொஞ்சம் காது கொடுப்போம்.
‘’நம் நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 3000 மில்லியன் டன் பண்ணைக் கழிவுகள் கிடைக்கிறது. பண்ணைக் கழிவுகள் என்றால் என்னவென்று தெரியுமல்லவா?
வயல்களில் அறுவடைக்குப் பின் எஞ்சியுள்ள வைக்கோல், பயிர் கட்டைகள், மற்றும் செத்தை என்றும் குப்பைக் கூளம் என்றும் சொல்லப்படுபவைதான் பண்ணைக் கழிவுகள் என்பவை. நெல் என்றால் அறுவடைக்குப் பின் கிடைக்கும் பயிர் காம்புகள் மற்றும் அறுவடை, போர் அடித்தலுக்குப் பின் மிஞ்சும் பொருட்கள்தான் பண்ணைக் கழிவுகள். சோளம், கம்பு, மக்காச் சோளம் ஆகிய பயிர்களின் அறுவடைக்குப் பிறகும் இத்தகைய பொருட்கள் கிடைக்கும். இதில் ஓரளவு மட்டுமே கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்தப்படுகிறது. பொதுவாகவே நெல் அறுவடைக்குப் பின் மீதமாகும் வைக்கோல் மாடுகளுக்கு உணவாகிறது. இதுபோக பல வைக்கோல் போர்கள் அப்படியே விடப்படுகின்றன, அல்லது கொளுத்திவிடப்படுகின்றன.
அப்படி எரிக்காமல்... சுமார் 25 சதவிகித பண்ணைக் கழிவுகளை காளான் சாகுபடிக்கு உபயோகப்படுத்தினால் 400 மில்லியன் டன் காளான் உற்பத்தி செய்ய இயலும். ஆம். நாம் கையில் வெண்ணையை வைத்துக் கொண்டே நெய்யை பற்றி அறியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

தற்போது தமிழ்நாட்டில் 13,000 மெட்ரிக் டன் காளான்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் கிடைக்கும் பண்ணைக் கழிவுகளின் கணக்கிடப்பட்ட அளவு எவ்வளவு தெரியுமா? சுமார் 30 கோடி டன். இவற்றில் சுமார் 10 சதவிகித பண்ணைக் கழிவுகளை காளான் உற்பத்திக்குப் பயன்படுத்தினாலே... 3.4 லட்சம் டன் காளான் உற்பத்தி செய்ய வாய்ப்புள்ளது.
குறிப்பாக தமிழ்நாட்டில் வைக்கோல் அதிக அளவு உற்பத்தி ஆகிறது. வைக்கோலை வைத்து காளான் வளர்க்கும் முறையை பிரிட்டிஷ் அக்ரோ புராடக்ட்ஸ் நிறுவனம் செம்மையாக செய்து வருகிறது. தமிழகம் முழுதும் வைக்கோல் மூலம் விவசாயிகள் காளான் வளர்ப்பில் இப்போது மெல்ல மெல்ல ஈடுபடத் தொடங்கியுள்ளார்கள்.

காளான் வளர்ப்புக்கு சிறிய இடம் போதுமானது. பண்ணையில் கிடைக்கும் சோளம் மற்றும் வைக்கோல் ஆகியவற்றை முறையே காளான் விதை மற்றும் காளான் உற்பத்திக்குப் பயன்படுத்தலாம். கிராம பெண்கள் மற்றும் வேலையில்லா பட்டதாரிகள் காளான் வளர்ப்பை சுயதொழிலாக தொடங்கலாம். வறுமைக்கோட்டுக்குக் கீழ் வாழும் மக்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு காளான் வளர்ப்பு உறுதுணையாக இருக்கும்.
இந்தியாவில் காளான் வளர்ப்பில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, பிரிட்டிஷ் அக்ரோ புராடெக்ட்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இதில் முன்னோடியாகத் திகழ்கிறது.
பிரிட்டிஷ் அக்ரோ புராடெக்ட்ஸ் நிறுவனம் தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையிடம் தரச் சான்றிதழ் பெற்றுள்ளது. இந்த உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையானது தயாரிக்கப்படும் உணவுப் பொருட்கள்,அவற்றை சேமிக்கும் முறை, விநியோகம், விற்பனை மற்றும் தேவைக்கேற்ற இறக்குமதி ஆகிய அம்சங்களைக் கருத்தில் கொண்டு தரச்சான்று வழங்குகிறது. மேலும் காளான் உற்பத்தி, பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதிக்கான ஐ.எஸ்.ஒ (ISO 22000 : 2005) தரச் சான்றிதழையும் பிரிட்டிஷ் அக்ரோ புராடெக்ட்ஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

காளான்களின் உலகத்தில் பிரிட்டிஷ் அக்ரோ புராடெக்ட்ஸ் நிறுவனத்தின் கையைப் பிடித்துக் கொண்டு இன்னும் உள்ளே செல்வோம், காத்திருங்கள்.
காளான் - சில்லரை மற்றும் மொத்த விற்பனை:
பட்டன் காளான்கள் பிரிட்டிஷ் அக்ரோ நிறுவனப் பண்ணைகளில் கிலோ ரூ. 150 என்ற அளவில் கிடைக்கிறது.

முகவரி:

பிரிட்டிஷ் அக்ரோ புராடக்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்,
(அக்ஷயா பொறியியல் கல்லூரி அருகில்)

புழுதிவாக்கம் (அஞ்சல்), மதுராந்தகம் தாலுகா,
காஞ்சிபுரம் மாவட்டம். தமிழ்நாடு - 603 314.
தொலைபேசி : 8939991194
கடைஎண்: டி-29,
பெரியார் காய்கறிச் சந்தை,
கோயம்பேடு, சென்னை.
தமிழ்நாடு - 600 092.
தொலைபேசி : 8939994236
எண்: 208
மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தை,
மாட்டுத்தாவணி, மதுரை - 625007.
தொலைபேசி: 8939821172
எண்: 205,
சின்னசுவாமி நாயுடு சாலை,
நியூ சித்தாபுத்தூர், கோயம்புத்தூர்.
தொலைபேசி : 8939994235  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை: