இந்த மூன்று ஆறுகளையும் துர்நாற்றம் வீசும் அளவுக்கு அசுத்தமாக்கிய சமூகமும் அதை மீட்டெடுக்க ஆக்கபூர்வமான எந்த முயற்சியையும் முன்னெடுப்பதாகத் தெரியவில்லை. இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் ஆகிய நீர்நிலைகளை தூய்மையாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள வீடுகளிலிருந்தும், தனியார் நிறுவனங்களிலிருந்தும் வெளியேற்றப்படும் கழிவுகளால் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் நீர்நிலைகளில் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. இந்த நீர்நிலைகளை மீட்க தமிழக அரசு தனித்துறையை உருவாக்க வேண்டும். இந்த நீர் நிலைகளை மீட்டெடுக்க நிதி அளிப்பவர்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும் இதுதொடர்பாக விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
இனியாவது, தமிழக அரசு சென்னையின் கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் ஆறுகளை மீட்டெடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ளுமா என்பதே அனைவரின் கேள்வியாக இருக்கிறது. minnambalam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக