சங்கரமூர்த்தி தெலுங் கானா மாநில கவர்னராக நியமனம் செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
இதற்கிடையே தமிழக கவர்னர் ரோசய்யா மாற்றம் செய்யப்பட மாட்டார் என்று தெரியவந்துள்ளது. அண்டை மாநிலமான ஆந்திராவை சேர்ந்த ரோசய்யா தமிழக அரசுடன் சுமூகமான உறவுடன் இருந்து வருகிறார்.குறிப்பாக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுடன் அவர் 2011-ம் ஆண்டில் இருந்தே நல்ல நட்புடன் இருக்கிறார். எனவே ரோசய்யாவுக்கு கவர்னர் பதவியில் நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் 14-ந் தேதி பிரதமர் மோடியை சந்தித்து பேசிய முதல்- அமைச்சர் ஜெயலலிதா இது பற்றி பேசி முடித்து விட்டதாக தெரிகிறது. எனவே ரோசய்யா தமிழக கவர்னராக பதவி நீட்டிப்பு செய்யப்படுவது உறுதியாகி விட்டதாக இன்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. dailythanthi.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக