சனி, 15 ஏப்ரல், 2017

பெரிய ஊடகங்களே பரப்பிய பொய் செய்தி" இடஒதுக்கீடும் உத்தர பிரதேசமும்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் உத்திர பிரதேச முதலமைச்சர் ஆதித்ய நாத், தனியார் மருத்துவ கல்லூரியில் ஓ.பிஸி, எஸ்ஸி, எஸ்டி பிரிவினருக்கு வழங்கப்பட்டிருந்த இடஒதுக்கீட்டை ரத்து செய்ததாக செய்தி வெளியானது. இந்தியா டுடே, புதிய தலைமுறை போன்ற ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிட்டன. சமூக ஊடகங்களில் பரபரப்பாக இந்தச் செய்தி விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இடஒதுக்கீடு ரத்து என்ற செய்தி உற்பத்தி செய்யப்பட்ட செய்தி என தெரியவந்துள்ளது. இடஒதுக்கீடு ரத்து செய்தி வெளியான உடன் மருத்துவ கல்வி இயக்குனர் வி. என். திரிபாதி அதை மறுத்துள்ளார். மேலும் அவர், தனியார் மருத்துவ கல்லூரிகளில் ‘நீட்’ தேர்வு எழுதிய மதிப்பெண் அடிப்படையில் இடஒதுக்கீடு நிரப்பப்படுவதாக தெரிவித்துள்ளார். அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மட்டுமே இடஒதுக்கீடு அமலில் இருப்பதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி: thetimestamil.com.  newindianexpress.com/nation/2017/apr/13/quota-scrapping-uttar-pradesh-government-officials-rush-to-counter-false-trending-of-info-1593381.html

கருத்துகள் இல்லை: