செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

இன்று தீர்ப்பு : சசி கொண்டாட்டம்,சசிகலா முதல்வர் பதவி ஏற்கும் மன நிலையில் உள்ளார்


நாம எத்தனை குமாரசாமிகளைப் பாத்துட்டோம்.ஜெ.வழக்கில் தன்னை ரொம்ப கறார் பேர்வழி என்று காட்டிக் கொண்டவர் முன்னாள் நீதிபதி குமாரசாமி. வழக்கு விசாரணை மீது ஜெ.வை,சசி கும்பலை கன்னா பின்னவென்று திட்டியவர் இவர். வக்கீல்களை உண்டு இல்லை என்று துவம்சம் செய்தார். ஆனால் தீர்ப்பில் ஜெ,விற்கு சாதகமான தீர்ப்பு வந்தது. குமாரசாமி பல ஆயிரம் கோடி லஞ்சம் வாங்கி விட்டார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. தற்போது கூட சசிகலாவிடம் தீர்ப்பு குறித்த எந்த கவலையும் அவரது முகத்தில் தெரியவில்லை. ஒரு வேளை அவர் ஏற்கனவே சிறைவாசம் அனுபவித்ததால் வந்த முதிர்ச்சியாக கூட இருக்கலாம். கவர்னரையே மிரட்டுகிறார். ஆட்சி அமைத்தே தீருவேன் என்று கூறுவதைப் பார்த்தால் நல்ல செய்தியே வரும் என்று அவர் கணித்திருக்கலாம் என்றே தோன்றுகிறது. ஒரு வேளை பாதகமாக தீர்ப்பு வந்தாலும் திண்டுக்கல் சீனிவாசன் அல்லது ஓ.எஸ் மணியன் முதல்வர் ஆகலாம் என்று ஒரு பேச்சு அடிபடுகிறது.

கருத்துகள் இல்லை: