திங்கள், 13 பிப்ரவரி, 2017

கனிமொழி வீட்டில் துப்பாக்கி நபர் ! கொலை முயற்சி சந்தேகம் ? உளவு பார்த்தான்?

திமுக தலைவா் கலைஞர் கருணாநிதியின் மனைவி ராசாத்தியம்மாள், இவா்களது வீடு சிஐடி காலனியில் உள்ளது.
கனிமொழி இவரின் மகன் ஆதித்யா ஆகியோர் உடன் ராசாத்தியும் வசித்து வருகிறார். இது முன்னாள் முதல்வரின் வீடு என்பதால் வீட்டில் எப்போதும் 2 போலீசார் காவலுக்கு நிற்பது வழக்கம்.
.இந்நிலையில் இன்று மதியம் கனிமொழி கூட்டத்திற்கு  திமுகவின் உயர் மட்ட கூட்டத்திற்கு புறப்பட்டார்.
அப்போது சிறிது நேரத்தில் வீட்டுக்குள் நுழைந்த மர்ம ஆசாமி ஒருவன் மேல் மாடிக்கு சென்று மாடியில் தங்கியிருந்த இரண்டு பணிப்பெண்களையும் துப்பாக்கி முனையில் மிரட்டி பதுக்கி வைத்திருந்துள்ளான்.
கனிமொழி சென்ற சிறிது நேரம் கழித்து இரண்டு பணிப்பெண்களையும் காணவில்லையே என்று மாடிக்கு தேடி சென்றுள்ளார் ராஜாத்தி அம்மாள்.
அந்த வீடு மாடியில் பல அறைகள் மற்றும் கிராமத்தில் இருப்பது போல் தாழ்வாரம் கொண்ட வீடு.
பணிப்பெண்களை தேடி ராஜாத்தி அம்மாள் சென்றவுடன் அவரையும் துப்பாக்கி முனையில் மிரட்டிய ஆசாமி நகை பணத்தை கொண்டு வந்து தரும்படி கேட்டுள்ளான்.

இதனால நிலை குலைந்து போன ராஜாத்தி அம்மாள் அவனிடம் கெஞ்சியுள்ளார். ஆனால் மசியாத அவன் பணம் நகைகளை தராவிட்டால் இரண்டு பணிப்பெண்களையும்சுட்டுகொன்றுவிடுவதாக மிரட்டியுள்ளான்.
பணம் நகைகள் கீழே பீரோவில் உள்ளது என்று ராஜாத்தி அம்மாள் கூறியுள்ளார். போய் எடுத்து வா, எதாவது செய்தால் இவர்களை கொன்று விடுவேன் என்று கீழே அனுப்பியுள்ளான்.
கீழே பதைபதைப்புடன் ஓடி வந்த ராஜாத்தி அம்மாள் பேரன் ஆதித்தியாவிடம் சொல்லி கனிமொழிக்கு தகவல் சொல்ல சொல்லிவிட்டு நைசாக வாசலில் நின்ற போலீசாரிடம் விபரத்தை கூற போலீசார் அதிரடியாக மேலே நுழைந்து துப்பாக்கி முனையில் அந்த ஆசாமியை பிடித்துள்ளனர்.
அவனை பிடித்து அபிராமபுரம் போலீசில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவன் பெயர் பிரசாந்த் என்பதும், திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்தவன் என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கனிமொழி ராஜ்ய சபா எம்பி எனபதால் வந்தவன் திருடும் நோக்கத்துடன் வந்தவனா வேறு நோக்கத்துடன் வந்தானா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: